search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marudamalai"

    • அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது
    • நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது

    1996-ம் ஆண்டில் சுந்தர் சி-யின் நகைச்சுவைத் திரைப்படமான உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகியவற்றில்உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுராஜ். 1997-ம் ஆண்டில் ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தில் சுந்தர் சி-க்கு தொடர்ந்து உதவியதோடு ஜானகிராமன் படத்தின் இணை இயக்குனராகவும் இருந்தார்.

    பின்னர் இயக்குநர் சுந்தர் சி-யை வைத்து 2006-ல் தலைநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுராஜ். 'அதன் பின் 'மருதமலை' படத்தை 2007-ல் சுராஜ் இயக்கினார். இப்படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். 2009-ல், தனுஷ், தமன்னா நடித்த படிக்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :-



     

    மருதமலை படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் ஸ்கிரிப்டை ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் தொகையை வாங்கினார். இதில் நடித்திருந்தால் மருதமலையே அவரது முதல் போலீஸ் வேடமாக இருந்திருக்கும். ஆனால், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் "சச்சின்" படம் காரணமாக விஜய் இதிலிருந்து விலகினார்.

    இதற்கிடையில் நான் அஜித்திடம் இந்த கதையை கூறினேன். அவருக்கு 'ஸ்கிரிப்ட்' பிடித்திருந்தது. அவர் அதே நேரத்தில் "கிரீடம்"படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்ததாலும், வடிவேலுக்கு அப்போது அஜித்துடன் இந்த படத்தில் நடிக்க பிடிக்காததாலும் எங்களால் இந்த படத்தை தொடர முடியவில்லை.

    பிறகு நான், சுந்தர்.சி பணியாற்றிய "கிரி"படம் மூலம் அர்ஜுனுடன் தொடர்பு இருந்ததால் அவரிடம் சென்றேன். அவர் ஒப்புக்கொண்டதால் அதன்பின் 'மருதமலை' படம் உருவானது. உருவானது.அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு அவர்  கூறினார்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    ×