search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police rescued helpless"

    • மருதமலை பகுதியில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ஆதரவற்ற 3 பேரை போலீசார் மீட்டு, ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    வடவள்ளி

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு , ஆதரவற்ற நிலையில் ரோட்டு ஓரங்களில் உள்ளவர்களை மீட்டு அவர்களது சொந்தங்கள் மற்றும் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளார். அதன் பெயரில் பல பகுதியில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    மருதமலை அடிவாரப்பகுதியில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டார்.

    அப்போது அங்கு ஆதரவற்ற 3 பேரை போலீசார் மீட்டனர். அவர்கள் அரசு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தனது மகன் படிப்புக்காக பிச்சை யெடுப்பதாகவும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறினார். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.   

    ×