search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகர ஜோதி"

    • ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா
    • ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    1.ஓம்கன்னிமூல கணபதியேசரணம் ஐயப்பா

    2.ஓம்காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா

    3.ஓம் அரிஹர சுதனேசரணம் ஐயப்பா

    4.ஓம் அன்னதான பிரபுவேசரணம் ஐயப்பா

    5.ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

    6.ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    7.ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

    8.ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    9.ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    10.ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

    11.ஓம் உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    12.ஓம் உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா

    13.ஓம் ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    14.ஓம் எளியோர்க்கு அருள்பவனேசரணம் ஐயப்பா

    15.ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    16.ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    17.ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    18.ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    19.ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    20.ஓம் ஒப்பில்லாத திருமணியேசரணம் ஐயப்பா

    21.ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    22.ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

    23.ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    24.ஓம் ஔதடங்கள் அருள்பவனேசரணம் ஐயப்பா

    25.ஓம் சவுபாக்கியம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    26.ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    27.ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    28.ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

    29.ஓம் சிவ வைணவ ஐக்கியமேசரணம் ஐயப்பா

    30.ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    31.ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    32.ஓம் குளத்துப்புழை பாலகனேசரணம் ஐயப்பா

    33.ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    34.ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    35.ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

    36.ஓம் உத்திரத்தில் உதித்தவனேசரணம் ஐயப்பா

    37.ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    38.ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

    39.ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    40.ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    41.ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள்சரணம் ஐயப்பா

    42.ஓம் குருமகனின் குறை தீர்த்தவனேசரணம் ஐயப்பா

    43.ஓம் குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா

    44.ஓம் புலிப்பால் கொணர்ந்தவனேசரணம் ஐயப்பா

    45.ஓம் வன்புலியின் வாகனனேசரணம் ஐயப்பா

    46.ஓம் தாயின் நோய் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    47.ஓம் குருவின் குருவேசரணம் ஐயப்பா

    48.ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    49.ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    50.ஓம் தூய உள்ளம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    51.ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    52.ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    53.ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    54.ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

    55.ஓம் பேட்டை துள்ளும் பேரருளேசரணம் ஐயப்பா

    56.ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    57.ஓம் சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா

    58.ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    59.ஓம் பேரூர்த்தோடு தரிசனமேசரணம் ஐயப்பா

    60.ஓம் பேதமையை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா

    61.ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

    62.ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

    63.ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    64.ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

    65.ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    66.ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    67.ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    68.ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    69.ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    70.ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    71.ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    72.ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    73.ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    74.ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    75.ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    76.ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

    77.ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    78.ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

    79.ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

    80.ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    81.ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    82.ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    83.ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    84.ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    85.ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    86.ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    87.ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    88.ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

    89.ஓம் சபரி பீடமேசரணம் ஐயப்பா

    90.ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    91.ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    92.ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    93.ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

    94.ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    95.ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

    96.ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    97.ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    98.ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

    99.ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    • குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
    • சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான்.

     முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர்.

     மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

     மகிஷியை அழிப்பதற்காக அய்யப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர் களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

     மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

     குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

     குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

     இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

     மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான்.

     புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

     காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பொற்று எழுந்தாள். ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய ஐயப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

     அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு அய்யப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள்.

     12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

    சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

     அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப் பட்டது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    • அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
    • அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    அய்யப்ப உருவ தத்துவம்

    அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.

    இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.

    இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.

    குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

    இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.

    அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

    ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.

    இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,

    பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

    மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.

    அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

    அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.

    • சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
    • முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!

    ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.

    பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,

    கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,

    தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,

    வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,

    ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்

    திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

    ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.

    இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

    நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.

    முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.

    தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.

    ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.

    அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.

    நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.

    ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.

    ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.

    ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

    "எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்

    ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்

    ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்

    ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்

    ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"

    • செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
    • ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    மகர ஜோதியே ஐயப்பா!

    ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.

    'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.

    அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.

    இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.

    பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.

    இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.

    அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.

    இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.

    ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.

    திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.

    அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.

    இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.

    உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.

    "தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.

    • இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
    • பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்

    திருவனந்தபுரம்:

    மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதனையொட்டி இன்று மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து ஆபரண பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது பக்தர்கள் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் எழுப்பி மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மகர ஜோதி தரிசனத்தை காண வந்த பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சன்னிதானத்தை சுற்றி சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியிலும் குவிந்திருந்தனர். அவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

    ×