search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கமம்"

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது.

    கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், டாக்டர் ஜெமிலுநிசா, ஜஹாங்கீர் அரூஷி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் பாஞ்ச் பீர், கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் சோமு,சுலைமான் செயலாளர்கள் ஆசாத், நஜ்முதீன், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மீரான் மொய்தீன், செயலாளர்கள் சிக்கல் காஜா யூசுப், கிழக்கு மாவட்ட வுமன் இந்தியா மூவ்மெண்ட் தலைவர் ரம்ஜான், மேற்கு மாவட்ட தலைவர் கன்சுல் மஹரிபா முன்னிலை வகித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் செய்திருந்தார்.

    • 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கலை விழாவை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன.

    இதில் நுண்கலை, இசை, கருவி இசை, தோற்கருவி, துளை காற்று கருவி, தந்திக் கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம் உள்ளிட்ட 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 51 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை வேதாரண்யம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன், பள்ளி துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பாராட்டினர்.

    • சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டையொட்டி நடந்தது
    • மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில்இன்றுகாலைதொடங்கியது. இந்த மாநாடு வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தியாகி களின் நினைவு சுடர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது.

    இந்தநிகழ்ச்சிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜடா ஹெலன் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட 100 தியாகிகளின் நினைவு சுடர்கள் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்தர ராஜன் உள்பட முக்கிய மான தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வரவேற்புக்குழு கௌரவ ஆலோசகர் அமிர்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் க கனகராஜ், செல்ல சுவாமி, முன்னாள் எம்.பி. பெலார்மின், முன்னாள் எம். எல். ஏ. லிமாரோஸ், மற்றும் நிர்வாகிகள் அகமது உசேன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், தங்க மோகன், சிங்காரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் தொடங்கி வைத்தார்
    • முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ஆனிமாத பவுர்ணமி யையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடந்தது.

    கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாடசாலையில்இருந்து கைலாய வாத்தியத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில்உள்ள பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். அங்கு பூஜை நடந்தது.

    அதையடுத்து சுமங்கலிப் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். தொடர்ந்து வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டாக்டர் சிவசுப்பிர மணியபிள்ளை, பொருளாளர செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தார்கள்.

    கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ சூரிய குரு மகாராஜ் மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனை த்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம் உள்பட திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×