search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyoti"

    • விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.
    • அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அருகே உள்ள கருப்பூரில் அய்யனார் மாவடி கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில் 6 அடி உயர மெகா அகர்பத்தியில் கருப்பூர் கிராம மக்கள் முன்னிலையில் ஜோதி ஏற்றப்பட்டது.

    அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராமமூர்த்தி, பகுதி மேலாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×