search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகி"

    • சுதந்திர போராட்ட தியாகி ஆயிற்றே, எதையும் தியாகம் செய்தும், கடைசி வரை நம்பிக்கையுடன் போராடியும் தானே பழக்கம்.
    • ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க போராடிய தியாகிகளில் கிருஷ்ணசாமியும் ஒருவர்.

    தள்ளாத வயது, ஆனாலும் தளராத நம்பிக்கையில் தேசியக் கொடி, தலையில் காந்தி குல்லாவுடன் அமர்ந்து இருந்தார் கிருஷ்ண சாமி.

    அந்த வழியாக எத்தனையோ பேர் வந்தார்கள். போனார்கள். ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. தன்னந் தனிமையில் அவர் நடத்திக் கொண்டிருந்தது உண்ணா விரத போராட்டம்.

    இதுவே ஒரு அரசியல் கட்சியின் உண்ணாவிரத போராட்டமாக இருந்திருந்தால் எவ்வளவு கூட்டம்... படோடபம்... பாதுகாப்புடன் நடந்திருக்கும்! மக்களை கவர்ந்திருக்கும்!

    ஆனால் இவர் சுதந்திர போராட்ட தியாகி ஆயிற்றே, எதையும் தியாகம் செய்தும், கடைசி வரை நம்பிக்கையுடன் போராடியும் தானே பழக்கம்.

    ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க போராடிய தியாகிகளில் கிருஷ்ணசாமியும் ஒருவர். ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே திரும்பி பார்க்க வைத்தது தியாகிகளின் இந்த மாதிரி அகிம்சை போராட்டம்.

    ஆனால் சுதந்திரமாக வாழும் சொந்த நாட்டு மக்களே திரும்பி பார்க் காததை நினைத்து கிருஷ்ணசாமியின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

    அவர் எதுவும் கேட்கவில்லை. இந்த நாட்டுக்காக குடும்பத்தை மறந்து வீதியில் இறங்கி போராடி வெற்றியும் பெற்றோம்.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனக்கு குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்பதுதான் தியாகி கிருஷ்ணசாமியின் கவலை.

    சுதந்திரம் பெற்று மகிழ்ந்துவிட்டேன். சாவதற்கு முன் சொந்த நாட்டில் சொந்த வீட்டில் வாழ்ந்துவிட்டேன் என்ற நிம்மதியை அடைய வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

    நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இந்த தியாகியின் சின்ன ஆசையை கூட இந்த நாட்டால் நிறைவேற்றி கொடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

    பல ஆண்டுகளாக மனுக்கள் எழுதி எத்தனையோ அதிகாரிகளையும் சந்தித்துவிட்டாராம். ஆனால் அவரது கோரிக்கை மட்டும் நிறைவேறவில்லை.

    வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுக்க வந்திருக்கிறார். வழக்கம்போல் விரட்டியடிப்பு, அலட்சியப்படுத் தலை மட்டுமே சந்தித்து இருக்கிறார்.

    எனவே அந்த வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார். இப்படித்தானே அந்த காலத்தில் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருந்த ஆங்கிலேயர்களை போராடி சாதித்தோம்.

    இன்று சொந்த மக்களிடம் குடியிருக்க ஒரு வீடு கேட்டு போராட்டம். 'நாட்டையே மீட்டு தந்தோமே எங்களுக்கு ஒரு வீடு தந்தா குறைஞ்சா போவீங்க...? என்று பொக்கை வாய் திறந்து அவர் கேட்கும் கேள்வி நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது.

    நமக்காக போராடியவர் சாகப்போகும் வயதில் தனக்காக போராடுகிறார். அதுவும் ஒரு சின்ன வீட்டுக்காக! நிறைவேற்றி வைப்பார்களா அவரது சின்ன ஆசையை?

    • சி.ஐ.டி.யு. மாநில மாநாட்டையொட்டி நடந்தது
    • மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    சி.ஐ.டி.யூ. தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில்இன்றுகாலைதொடங்கியது. இந்த மாநாடு வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை யொட்டி நேற்று மாலை 4 மணிக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தியாகி களின் நினைவு சுடர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, கலை விழா நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெற்றது.

    இந்தநிகழ்ச்சிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜடா ஹெலன் வரவேற்று பேசினார். குமரி மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப் பட்ட 100 தியாகிகளின் நினைவு சுடர்கள் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சௌந்தர ராஜன் உள்பட முக்கிய மான தலைவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை யொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வரவேற்புக்குழு கௌரவ ஆலோசகர் அமிர்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் க கனகராஜ், செல்ல சுவாமி, முன்னாள் எம்.பி. பெலார்மின், முன்னாள் எம். எல். ஏ. லிமாரோஸ், மற்றும் நிர்வாகிகள் அகமது உசேன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், தங்க மோகன், சிங்காரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
    • இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில், வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், மணிகண்ணன், எம்.ஏ. நகர் குமார், பிரகாஷ், முன்னவன், நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×