search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருமுடி"

    • அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும்
    • அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    அய்யப்ப உருவ தத்துவம்

    அய்யப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசன முறையாகும்.

    இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை.

    இந்நிலையில் உடல் வில் போல் ஆடும் தன்மையுடையது.

    குதி கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

    இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மரந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும்.

    அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுரபைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

    ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

    அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையை காட்டிக் கொண்டிருக்கிறது.

    இந்த சின் முத்திரையை "அறிவடையாளம்" என்பர்.

    இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல்,

    பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

    மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம் பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.

    அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை அய்யப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

    அய்யப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி கட்டி பயணம் செய்கின்றனர்.
    • மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.ஆர்.சேதுபதி நகர் வழிபாட்டு மன்றம் உள்பட 108 மன்றங்கள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    மாவட்ட ஆன்மீக நிர்வாக குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் தணிக்கை குழு பொறுப்பாளர் நாகசேகரன், மாவட்ட வேள்விக் குழு தலைவி சாந்தி தனபால் முன்னிலையில், வட்ட, மன்றத் தலைவிகள் ஏற்பாட்டில் மாலை அணிந்து வருகின்றனர்.

    ஆர்.ஆர்.சேதுபதி நகர் மன்ற தலைவி நித்திய கல்யாணி மாரிமுத்து தலைமையில் மார்கழி மாத முழுவதும் சிறப்பு வழிபாடு செய்து இருமுடி கட்டி திரளான ஆண், பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் சென்று வருகின்றனர்.

    ராமநாதபுரம் மன்ற ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதில் இரு முடி கட்டி பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் இருமுடி செலுத்தினர். இந்த ஆண்டு இதுவரை 40 ஆயிரம் பேர் இருமுடி கட்டி பயணம் செய்துள்ளனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் வசதி வழங்கிய கோட்ட மேலாளர், காரைக்குடி பொது மேலாளர், ராமநாதபுரம் புறநகர் பிரிவு மேலாளர் பாலமுருகன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    ×