search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழிப்பு"

    • இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
    • காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    • நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக வார்டு வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரை பொறுத்த வரை கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்கங்களில் மழைநீர் தேங்கியது.

    கொசுப்புழு ஒழித்தல்

    இதையடுத்து நாமக்கல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மழைக்கால நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மேலும் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், கொசுப்புழு ஒழித்தல் உள்ளிட்ட பணிகளில் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணி வாரம் தோறும் வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினமும் 45 பணியாளர்கள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் உத்தரவின்படி நகராட்சி பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், வீடுகளின் முன்புறம் உள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

    டெங்கு

    இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திருமூர்த்தி கூறுகையில் மழைக் காலங்களில் கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க நகராட்சி பகுதியில் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்க மருந்து தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் டெங்கு பரவலை தடுக்க முடியும் என்றார்.

    • 23 இடங்களில் இருந்து புறப்பட்டு நாகர். அண்ணா விளையாட்டு அரங்கம் வந்தது
    • இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத்தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம் ஆகியவை இணைந்து கன்னியாகுமரி, குளச்சல், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட 23 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினார்கள்.

    பின்னர் இந்த ஜோதி ஓட்டம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், போலீஸ் டி.எஸ்.பி.ராஜா, குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ஜோதி ஓட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் ஆகியோர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். இதில் பள்ளி-கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை மருத்துவமனை புதுவாழ்வு இல்லம் சார்பில், அண்ணாசிலை சந்திப்பில் இருந்து ஜோதி ஓட்டம் புறப்பட்டது. புதுவாழ்வு இல்ல பணியாளர் கிறிஸ்டி வரவேற்று பேசினார். குளச்சல் மீன்துறை ஆய்வாளர் கனிசெல்வம் வாழ்த்துரை வழங்கினார். புதுவாழ்வு இல்ல இயக்குனர் அருட்சகோதரி, ஜோதியில் தீபம் ஏற்றினார்.

    நகர்மன்ற தலைவர் நசீர் கொடியசைத்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அருட்சகோதரிகள், புதுவாழ்வு இல்ல மக்கள், பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டம், திங்கள்நகர், இரணியல், பரசேரி, சுங்கான்கடை, பார்வதிபுரம் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் சென்றடைந்தது.

    ஆரல்வாய்மொழி முத்துநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டத்தை தனி துணை கலெக்டர் திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோவாளை தாலுகா தாசில்தார் வினை தீர்த்தான் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜோதி ஓட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். முத்து நகர், தோவாளை, வெள்ளமடம், வடசேரி வழியாக இந்த ஜோதி ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது.

    போதை ஓழிப்பு குழுநாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் போதை ஒழிப்பு தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் போதை குறித்.து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் போதையை ஒழிக்க முடியும்.

    குமரி மாவட்டம் போதையில்லா மாவட்டமாக மாற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே போதை பொருட்கள் பயன்படுத்து வோருக்கு பல்வேறு அறிவுரைகளை கூற வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்துவது நமது கடமையாகும். போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அவரது ரகசியங்கள் பாதுகாக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த தன்னார்வலர்களுக்கு பரிசுகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

    • “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23-ம் நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெ டுத்துச் செல்லும் வகையில்,

    2022-23-ம்நி தியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள், உரைகள் ஆகிய

    சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.

    மாநில அளவில் ஒரு முறை பயன்படுத்தும் நெகி ழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உரு வாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும்

    3 சிறந்த வணிக நிறுவனங்க ளுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை சேலம் மாவட்ட இணையதள

    மானல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவ ணங்களில் தனிநபர், துறைத்தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென் நகல்களை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவர்ஸ், 2-ம் தளம், எண்.1/276எ, மெய்யனூர் மெயின் ரோடு,

    சேலம் -636004 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    ×