search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுடன் மஞ்சப்பை விருது
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுடன் மஞ்சப்பை விருது

    • “மீண்டும் மஞ்சப்பை” பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23-ம் நிதியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    "மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெ டுத்துச் செல்லும் வகையில்,

    2022-23-ம்நி தியாண்டிற்காக மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன பைகள், உரைகள் ஆகிய

    சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்படும்.

    மாநில அளவில் ஒரு முறை பயன்படுத்தும் நெகி ழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழி இல்லாத வளாகத்தை உரு வாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும்

    3 சிறந்த வணிக நிறுவனங்க ளுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-வது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் 3-வது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

    இந்த விருதிற்கான விண்ணப்ப படிவங்களை சேலம் மாவட்ட இணையதள

    மானல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவ ணங்களில் தனிநபர், துறைத்தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென் நகல்களை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சிவா டவர்ஸ், 2-ம் தளம், எண்.1/276எ, மெய்யனூர் மெயின் ரோடு,

    சேலம் -636004 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 1.5.2023 ஆகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×