search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன்"

    • தூண்டுதலின்பேரில் பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் சிறுவன் திருடினான்.
    • பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    விருதுநகர் இந்திராநகர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பெண்கள் சிறுவனுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பழகி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று 4 பேரும் சிறுவனிடம் பாட்டி வீட்டு பீரோவில் இருந்து பணத்தை திருடு வருமாறு கூறி உள்ளனர். அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து ரூ.47 ஆயிரம் ரொக்கத்தை எடுத்து வந்து அந்த பெண்க ளிடம் கொடுத்துள்ளான். பின்னர் அந்த பணத்தை அவர்கள் பங்கு போட்டு கொண்டனர்.

    இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சிறுவனின் தாய் பீரோவில் இருந்த பணம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிறுவனிடம் கேட்டபோது நடந்த விபரத்தை கூறியுள்ளான். மேலும் பணத்தை எடுத்தது யாரிடமும் கூறக்கூடாது என பெண்கள் மிரட்டிய தாகவும் சிறுவன் அழுதுக் கொண்டே தனது தாயிடம் கூறினான்.

    இதையடுத்து சிறுவனின் தாயார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த அர்ஜூன் மனைவி அன்னி யம்மாள் என்ற அம்முனி (வயது33), செல்லப்பாண்டி மகள் ஜான்சி ராணி என்ற மீனா (21), மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பாலு மகன் சாலமன் ராஜா (24), ஆழ்வார்புரம் முருகன் மகன் கார்த்திக் (26) ஆகிய 4 பேர் சிறுவனை தூண்டி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
    • நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    புதுச்சேரி:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.

    அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.

    அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

    இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.

    இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.

    அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.

    ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.

    • சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது மகன் ஆகாஷ்(வயது 17). சம்பவத்தன்று காலை வீட்டில் தனியே இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாலை வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவனது தாயார் ஆஷிகா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • 5 ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி 7 வயது சிறுவன் சாதனை படைத்தார்.
    • உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காவலர் வாய்ஸ் தன்னார்வலர்கள் குழு, யூத் அச்சீவர்ஸ்கிளப் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனோஜ்குமார்-ஸ்ரீஜா தம்பதியின் மகன் சம்ருத் (வயது7) ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியவாறு ஒரு மணி நேரத்தில் 5.5 கிமீ தூரத்தை ஓடி கடந்து உலக சாதனை படைத்தார்.

    மேலும் 5 வயது சிறுமி ஆராதனா கண்களை கட்டிக்கொண்டு கையில் மரக்கன்று ஏந்தியபடி இடுப்பில் உள்ள வளையத்தை 30 நிமிடங்கள் சுழற்றி சாதனை செய்தார். மேலும் யோகவீனா (14) கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் மற்றும் யோகா ஆகியவற்றை அற்புதமாக செய்து காண்பித்தார்.

    நிகழ்ச்சியில் யூத் அச்சீவர்ஸ்கிளப் இயக்குனர் அய்யப்பன், உலக சாதனை தீர்ப்பாளர் நோபல் உலக சாதனை சி.இ.ஓ. அரவிந்த், காவலர் வாய்ஸ் தன்னார்வர்கள் குழு ஒருங்கிணைப்பார் ஞானேஸ்வரன், செயலாளர் அழகர்சாமி, மாவட்ட நுகர்வோர் மைய பொதுச் செயலாளர் மனோகர் சாமுவேல், பயிற்சியாளர்கள் அசோக், அந்தோனிசாமி, ஆனந்த்பாபு, விக்னேஷ், ஆனந்த, காவலர் வாய்ஸ் மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக சாதனை நிகழ்த்திய 3 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.
    • ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரி கண்ணாடிகளை உடைத்தனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கவி பாலன் (வயது 5). தனியார் பள்ளி மாணவன்.

    நேற்று மாலை பள்ளி விட்டு தனியார் வேனில் வீட்டுக்கு திரும்பி கவிபாலன் வேனில் இருந்து இறங்கி சாலையை கடந்து வீட்டுக்கு சென்ற போது திருவையாறு பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி சிறுவனின் மீது மோதியது.இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கவிபாலன் உயிர் இழந்தான்.

    இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியில் கண்ணாடிகளை உடைத்தனர் .அதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு தந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    இந்ததுயர சம்பவம் குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பழங்காநத்தத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
    • கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கோகுலன். இவரது இரண்டு வயது மகன் பிரசின் தேவ். சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் சிறுவன் இருந்தார்.

    இந்த நிலையில் அவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    உடனடியாக பெற்றோர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பிரசின்தேவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை பிரசின்தேவ் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறுவனுடன் வாலிபர் நின்றிருந்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சிறுவனுடன், வாலிபர் நின்றிருந்தார். அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை யிட்டபோது வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 17வயது சிறுவன், எம்.கே.புரம் முத்துத் தேவர் தெருவை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி கேயன்(19) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சோபாவில் படுத்திருந்த சிறுவனின் தாய் சோபாவில் இருந்து உருண்டு கீழே விழ சென்றுள்ளார்.
    • ஒரு சிறிய சேர் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்று காட்சிகள் வெளியாகி உள்ளது.

    பெண் குழந்தைகள் அப்பா செல்லம் என்றால், ஆண் குழந்தைகள் எப்போதுமே அம்மாவின் செல்லம் என்பார்கள். அந்த வகையில் இனையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருக்கிறான். அருகே சோபாவில் படுத்திருந்த சிறுவனின் தாய் சோபாவில் இருந்து உருண்டு கீழே விழ சென்றுள்ளார்.

    உடனே சிறுவன் விரைந்து சென்று தனது தாயை தாங்கி பிடித்து சரியாக படுக்க வைத்து விட்டு அதன் பிறகு அவரை பாதுகாக்க அவரது பக்கத்திலேயே ஒரு சிறிய சேர் ஒன்றில் அமர்ந்திருப்பது போன்று காட்சிகள் வெளியாகி உள்ளது. டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
    • வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர்.

    அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் நடந்து சென்ற பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களுடன் சேர்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.

    பொதுமக்கள் விரட்டி வருவதை கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் கவுசிக் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஸ்வின்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கூண்டு வைக்க உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிப்பிரி நடைபாதை அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது.

    இதனால் வனப்பகுதியில் உள்ள சிறுத்தை,யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து பக்தர்களை தாக்கி விட்டு செல்கிறது.

    அலிப்பிரி நடைபாதையில் வனவிலங்குகள் வராமல் தடுப்பது குறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து பக்தர்களை தாக்கும் சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணம்மாள். இவரது பேரன் சூர்யா(6). இவர் ஊருக்கு தெற்கில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்ைல. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலும் 2 பேர் தலைமறைவு
    • 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32).

    இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அரவிந்தை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர் பாக இந்த தாக்குதல் சம்ப வம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×