search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறுவனுடன் வாலிபர் நின்றிருந்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சிறுவனுடன், வாலிபர் நின்றிருந்தார். அவர்களை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை யிட்டபோது வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 17வயது சிறுவன், எம்.கே.புரம் முத்துத் தேவர் தெருவை சேர்ந்த சேகர் மகன் கார்த்தி கேயன்(19) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×