search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் தவறி விழுந்து சாவு
    X

    சிறுவன் தவறி விழுந்து சாவு

    • மதுரை பழங்காநத்தத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் தவறி விழுந்து இறந்தான்.
    • கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கோகுலன். இவரது இரண்டு வயது மகன் பிரசின் தேவ். சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் சிறுவன் இருந்தார்.

    இந்த நிலையில் அவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது.

    உடனடியாக பெற்றோர் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பிரசின்தேவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை பிரசின்தேவ் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×