என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு
- கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அயன்கரிசல்குளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணம்மாள். இவரது பேரன் சூர்யா(6). இவர் ஊருக்கு தெற்கில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்ைல. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






