search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளி"

    • ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
    • திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது.
    • குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி, மோதல், பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு கோவை மாநகர் மற்றும் புறநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில குற்ற வழக்குகளில் கைதான நபர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் சிலர் மீண்டும் வழக்கு விசாரணையில் ஆஜரா காமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

    கோவை மாநகர் மற்றும் புறநகரில் 200-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இவர்களைப் பிடிக்க 'ஆபரேஷன் வாரண்ட்' என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்து தமிழக டி.ஜி.பி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை நகரில் மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் மேற்பா ர்வையிலும் கோவை மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேற்பார்வை யிலும் பிடிவாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு போலீஸ் நிலையத்துக்கு 2 போலீசார் வீதம் மாநகர் புறநகரில் சுமார் 100 தனிப்படை போலீசார் பிடிவாரண்ட் குற்றவாளிகளை தேடும் பணியை இன்று முதல் தொடங்ககி உள்ளனர்.

    முதல் கட்டமாக கோவை கோனியம்மன் கோவில் விழாவிற்கு வந்திருந்த 10 பிடிவாரண்ட் குற்றவாளிகள் போலீசில் சிக்கினார். ஒரு வார காலத்திற்குள் அனைத்து தலைமறைவு குற்றவா ளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி பல்வேறு குற்றவாளிகளில் இதுவரை சிக்காத நபர்கள், பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு கோவையில் தஞ்சம் அடைந்துள்ள நபர்கள், பண மோசடி மற்றும் பல்வேறு மோசடிகளில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது.

    • வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.
    • 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது.

    நாகப்பட்டினம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன.

    வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் இதுவரை கிளைச்சிறை இல்லை.

    வேதாரண்யத்தில் கிளைச்சிறை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் சிறைக்கோ அல்லது 60 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கி.மீ. தொலைவில் உள்ள மயிலாடுதுறை சிறைக்கோ அல்லது 120 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.

    இதனால் போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள்.

    அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை உள்ள கிளை சிறைச்சாலைக்கு செல்ல இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.

    னவே, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல் சங்க தலைவர் பாரி பாலன் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை கீழவெளி வீதி, சுங்கம் பள்ளி வாசல், பதிமுத்து இல்லத்தை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவரது மகன் சம்சுதீன் (வயது30). இவர் 2003-ம் ஆண்டு கீழவாசல் பஸ் நிறுத்தம் முன்பு 4 ½ பவுன் நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் சம்சுதீனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி சம்சுதீன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மற்றொரு வழக்கு

    திருப்பூர் முருகப்பாளையபுரம், குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஸ்டீபன் (37). இவர் 2008-ம் ஆண்டு மதுரை தெற்காவணி மூல வீதி எம்.எஸ். தங்க மாளிகை நகை கடை முன்பு நின்ற இருசக்கர வாகனத்தின் மீது வைத்திருந்த சுமார் 520 கிராம் தங்க நகைகள் கொண்ட பையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமைறைவாகி விட்டார்.பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் ஸ்டீபனை மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வருகிற 12-ந் தேதி ஸ்டீபன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்குவாசல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் தெரிவித்துள்ளார்.

    • கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
    • மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.

    இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    • தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
    • 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு டி.ஜி.பி பாராட்டு தெரிவித்தார்.
    • தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் அரசு ஆஸ்பத்திரி உதவி நிலைய டாக்டர் மனோஜ் குமாரின் கிளினிக் மற்றும் வீடு உள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான இவர் தனக்கு சொந்தமான 2 கார்களை கிளினிக் அருகில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்று விட்டார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் முகத்தை மூடியபடி வந்து டாக்டர் மனோஜ்குமாரின் காருக்கு தீ வைத்து விட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே அனைவரும் வந்து தீயை அனைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த சீனி முகம்மது மகன் அப்துல் ஹக்கீம் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் இப்ராகிம் , அப்துல் அஜிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த ராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சித்திரவேல் உள்பட 10 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1. லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, சான்றிதழை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழங்கி பாராட்டினார்.

    அப்போது தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் உடனிருந்தார்.

    • இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
    • சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் 2 கோவில்களில் விநாயகா் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்துக்களின் எழுச்சித் திருவிழாவான விநாயகா் சதுா்த்தி பெருவிழா தமிழகமெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

    இந்து முன்னணி சாா்பில் நிகழாண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளா்ப்போம்' என்ற தலைப்பில் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகா் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவானது பல்லாயிரக்கணக்கானோா் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக விரோதிகள் இரு கோவில்களில் விநாயகா் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனா்.சிலைகளை சேதப்படுத்தியவா்களை காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இந்து முன்னணி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக சாா்பில் மனு :

    விநாயகா் சிலைகளை சேதப்படுத்திய நபா்களைக் கைது செய்யக் கோரி பாஜக. சாா்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பி.செந்தில்வேல் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.இந்நிலையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலைகளை சிலா் சேதப்படுத்தியுள்ளனா்.சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ஆகவே விநாயகா் சிலைகளை தேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதே போல சாமிதோப்பு அருகே கடந்த மாதம் வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர் யார்? கொலையாளி யார்? என விசாரணையில் இறங்கினர்.

    பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியும் கொலை செய்யப்பட்டவர் யார்? என இது வரை அடையாளம் தெரிய வில்லை. வெளிமாவட்ட த்தைச் சேர்ந்த யாரை யாவது கொலை செய்து காரில் உடலை கடத்திவந்து கன்னியாகுமரி ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலை தொடர்பாக துப்பு துலக்க அமைக்க ப்பட்டு உள்ள 2 தனிப்படை போலீசார் 18-ந் தேதிக்கு முந்தைய சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது வடசேரி பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரது உருவம் கொலை செய்யப்பட்டவர் உருவத்துடன் ஒத்துப் போனதாக தெரிகிறது என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் கொலை செய்ய ப்பட்ட வர் வடமாநிலத்தை சேர்ந்தவரா? என்றும் கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கொலை நடந்து 6 மாதங்கள் ஆன பிறகும் கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்? என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இதே போல சாமிதோப்பு அருகே கடந்த மாதம் வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    • குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் போலீஸ் சூப்பிரண்டு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர்.

    மதுரை

    மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் செயல்பட்டனர். பின்னர் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர்த்தரப்பினர் மிரட்டி வந்தனர். இது தொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்குப்பதிவு செய்தனர். எனவே குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருமங்கலம் டவுன் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

    • போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
    • போலீஸ் நிலையத்தில் ஆய்வு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத் நேற்று மாலை "திடீர்" என்று வந்தார். அங்கு வந்த அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். போலீசாருக்கு சில அறிவு ரைகளையும் வழங்கினார். போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும் எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டார்.

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தல மாக திகழ்வதால் போலீஸ் நிலையத்தையும் சுற்றுப்பு றங்களையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு புகார் மனுக்கள் வருகின்றன என்பது குறித்தும் எந்த மாதிரியான வழக்குகள் பதிவாகுகின்றன என்பது குறித்தும் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டேன். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    டி.ஜி.பி.யின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) குமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை நாகர்கோவிலில் நடைபெற இருக்கிறது. இதில் 2 ஆயிரம் போலீசார் பங்கேற்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு போலீசாருக்கு பரிசோதனை செய்கின்றனர்.

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் போலீஸ் ரோந்து ஏற்படுத்தப்படும்.

    கன்னியாகுமரியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கழுத்து அடிபட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரெயில்வே பாலத்தின் அடியில் வீசப்பட்டு பிண மாக கிடந்தார். மர்மமான முறையில் நடந்த அந்த வாலிபரின் கொலை வழக்கு குறித்து மிக விரைவில் துப்பு துலக்கப்படும்.

    அதற்காக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கன்னியா குமரியில் நடைபெற்ற போலீ சாரின் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளிக்க அதனை ஏற்க முடியாத 78 வயது நபர், கோர்ட் அறையிலேயே தன்னை கத்தியால் குத்திக்கொண்டார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜான்னி ஐகார்ட் என்ற 78 வயது முதியவர் பாலியல் புகார் ஒன்றில் கைதாகி ப்ளூமிங்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐகார்டை குற்றவாளி என அறிவித்தார்.

    தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஐகார்ட் தன்னுடைய பையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து கோர்ட் அறையில் வைத்தே தனது அடிவயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்துடன் மருத்துவமனைக்கு ஐகார்ட் கொண்டு செல்லப்பட்டார்.

    அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றாலும், கத்தியுடன் அவர் நீதிமன்றத்துக்கு வந்தது எப்படி?, பாதுகாப்பு கருவிகள் எதற்கு உள்ளன என போலீசார் மீது கேள்விக்கத்திகள் பாய்ந்துள்ளது.
    ×