search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்த துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத் திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை முதற்கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்திற் குட்பட்ட 4 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண் களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன் னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் நாகர்கோ வில் மாநகராட்சி பகுதியில் ஏழகரம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட் டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நி லைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி, பரக்குன்னு ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பையஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், நாகர்கோவில் மாநகர்நல அலுவலர் டாக்டர் ராம் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மரக்கன்றுகள் நடும் முகாமில் அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.

    மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு க்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், துறைசார்ந்த அலுவலர்க ளுடன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சென்ற மாதம் விபத்து களினால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் விபத்து கள் ஏற்படா வண்ணம் மேற் கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கேரளாவில் நண்பர் வீட்டில் பதுங்கல்-தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    • இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு  மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    பெனடிக்ட் ஆன்றோ தக்கலை பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார்.அப்போது ஆலயத்துக்கு வரும் இளம்பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, பாதிரியார் மீது புகார் கொடுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது எஸ்.பி.அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில்  ஆலயத்துக்கு சென்ற போது பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.மேலும் தன்னை  வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே  சமூக வலைதளத்தில் வெளியான ஆபாச படங்களில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்  என தெரியவந்தது.

    தற்போது அந்த படம் வைரலானதை தொடர்ந்து  அவரும் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது அடுத்தடுத்து புகார்கள் வெளிவந்த நிலையில் குமரி மாவட்ட போலீசார் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த விபரம் தெரியவந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ  தற்போது கேரளாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்க ப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புகார் அளிக்கும் பெ ண்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தைரி யமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.14-

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொது தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10508 மாணவர்களும், 11572 மாணவிகளும் என மொத்தம் 22080 பேர் எழுதுகிறார்கள். இதை யடுத்து தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டது. 84 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே மாணவ- மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்கான இறுதிக்கட்ட படிப்பை மேற்கொண்டனர்.

    பின்னர் தேர்வு மையத்திற் குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகள் குறித்த விபரம் பள்ளி வளாகத்திற்குள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங் கியது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினார்கள். மதியம் தேர்வு முடிவடைந்தது. தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டிருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தேர்வுகள் முடிவடைந்து தொடர்ந்து பலத்த பாது காப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளிக்கும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் படந்தாலுமூடு சேகரட் கார்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. விடைத்தாள்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    • விஜய்வசந்த் எம்.பி. தலைமையில் திரளானோர் பங்கேற்பு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும், ஐதராபாத் சார்மினார் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாருக்கு விற்க கூடாது, கோட்டார் ரெயில் நிலைய சாலைகளை சீரமைக்க வேண்டும், தாம்பரம்- நாகர்கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், ரெயில்வே மேம்பாலங்களை கட்ட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கன்னியா குமரி மாவட்டத்தை ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும் குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு விஜய்வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம் (கிழக்கு) மற்றும் பினுலால் சிங் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர் கோவில் மாநகர தலைவர் நவீன் குமார், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி பேசுகையில், காங்கிரஸ் கட்சி எழுச்சி அடையும் நாள் வந்துவிட்டது. குமரி மாவட்ட வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. சென்னை- நாகர்கோவில் தினசரி ெரயில் இயக்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சம்பந்தமாக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தொடர்ந்து மத்திய அரசிடம் மனு அளித்து வருகிறேன். ஆனால் அதன் மீது மத்திய அரசு அலச்சியம் காட்டி வருகிறது என்றார்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் (விஜய் வசந்த்) மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் அளித்து வருகிறேன். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்.

    சென்னை- நாகர் கோவில் தினசரி ரெயில் இயக்க வேண்டும், புதிய மேம்பாலங்கள் அமைக்கவும் மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை மத்திய அரசு அளித்துள்ளேன்.

    ஆனால் இன்றளவிலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. காங்கிரஸ் கட்சி எம்.பி என்பதால் எனது கோரிக்கைகள் மத்திய அரசால் புறக் கணிக்கப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் மத்திய அரசிடம் ரெயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து மனுக்கள் அளிப்பேன். அதிலும் எந்த வித முன்னேற்றம் இல்லை என்றால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொழில் அதிபர் வீடு-அலுவலகங்களில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கின
    • ஆடிட்டரின் வீடு- அலுவலகம் சோதனை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. குறிப்பாக திரு வட்டாறை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்த ராஜே ந்திரன் என்பவரது வீடு, திருமண மண்டபம், செங்கல் சூளை போன்றவற்றில் ஓரே நேரத்தில் சோதனை நடத்த ப்பட்டது.

    தொழில்அதிபர் ராஜேந் திரனுக்கு, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உள்ளன. மேலும் இவர் குமார கோவில் முருகன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறார்.

    இவருக்குச் சொந்தமான லாரிகள் மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்.சாண்ட், என்.சாண்ட்போன்றவை திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சூழலில் தான் வருமான வரித்துறையினர் ராஜேந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட் டனர். மேலும் அவ ருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகள் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அவரது விடுதி ஆகிய வற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவண ங்களை வருமான வரித்துறை யினர் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அவற்றை தங்கள் அலுவலகம் கொண்டு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜேந்திரனின் ஆடிட்ட ரின் வீடு மற்றும் அலுவலகம் கழுவன் திட்டை பகுதியில் உள்ளது. அங்கும் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். இதில் சொத்து மற்றும் பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    • கார் பதிவு எண்ணை கைப்பற்றி விடிய, விடிய சோதனை
    • ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது.இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா? போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய் யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    நாகர்கோவில்:

    உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
    • ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் 35 மீட்டர் அளவு கொண்ட படகுகளை பதிவு செய்ய மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இந்திய கடலோர காவற்படை சார்பில் மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி நிலைய இந்திய கடலோர காவல்படை தளபதி வினோத் குமார் முன்னிலை வகித்தார்.துணை தளபதி சாஜூ செரியன், குளச்சல் மீன் துறை உதவி இயக்குனர் நடராஜன் ஆகியோர் பேரிடர் காலத்தில் மீனவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய உபகரணங்களை செயல்முறை மூலம் விளக்கி பேசினர்.

    தொழிலுக்கு செல்லும் போது கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்கள் எடுத்து செல்ல வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், முன்னாள் தலைவர் ஆனந்த், மாநில காங்.செயற்ழு உறுப்பினர் யூசுப்கான், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் சிபு ஆகியோர் கடலில் மாயமாகும் மீனவர்களை துரிதமாக மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    குளச்சல், முட்டம், கன்னியாகுமரி ஆகிய பகுதியில் சுமார் 1000 விசைப்படகுகள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை.ஆழ்கட லில் தங்கி மீன் பிடிக்கும் படகுகள் 35 மீட்டர் அளவு கொண்டவை.இந்த வகை படகுகளை பதிவு செய்யவும் மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு பதிலளித்து விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    குமரி மாவட்ட கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும் என கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.இவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

    கூட்டத்தில் குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆன்றனி, மாவட்ட காங்.துணைத்தலைவர்கள் முனாப், தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்.ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மீனவர் காங்.நிர்வாகிகள் ஜோசப்மணி, ஸ்டார்வின், லாலின், இளைஞர் காங்.நிர்வாகிகள் டைசன் ஜேக்கப், திங்கள்நகர் பேருராட்சி தலைவர் சுமன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுசீந்திரத்திற்கு மீண்டும் ஜெயசந்திரன் நியமனம்
    • இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    நெல்லை சரகத்துக்குட் பட்ட போலீஸ் நிலையங்க ளில் பணியாற்றும் 19 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் இன்ஸ் பெக்டர் ஷேக் அப்துல் காதர் நெல்லை மாவட் டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்தவர். மீண்டும் இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயசந் திரன் பதவியேற்க உள்ளார்.

    சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை சிட்டி எஸ்.பி. சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் இசக்கிதுறை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    கொல்லங்கோடு இன்ஸ் பெக்டர் ராமா நெல்லை மாவட்ட சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மார்த் தாண்டம் போலீஸ் நிலை யத்தில் கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்பெக் டர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுவதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ×