search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ"

    • தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
    • போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

    திருவட்டார்:

    குலசேகரம் நாகக்கோடு பகுதியில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27), முதுநிலை பயிற்சி மயக்கவியல் துறை நிபுணராக 2-ம் ஆண்டு படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தாவின் அறை கதவு நேற்றுமுன்தினம் திறக்கப்படவில்லை.

    இதனால் சக மாணவிகள் தகவல் தெரிவித்ததையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சுகிர்தா பிணமாக கிடந்தார். சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் போலீசாருக்கும், சுகிர்தாவின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர் ஹரிஷ் மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரிஷ், ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணி வரை போலீசார் சுகிர்தாவுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட னர். மேலும் சுகிர்தா சம்பவத்தன்று யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளனர். இதற்கிடையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது தந்தை சிவக்குமார் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பரம சிவம், ஹரிஷ், ப்ரீத்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணைக்கு பிறகு 3 பேரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    • மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டந்தோறும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கடந்த 1-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் தினமும் நான்கு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். மருத்துவ முகாமில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, மேல்புறம், ராஜாக்கமங்கலம், முஞ்சிறை, கிள்ளியூர் உள்பட 9 ஒன்றியங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை 11,594 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 33 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. தற்பொழுது டெங்கு அறிகுறியுடன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேரும், தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பிறகு 2 நாட்களுக்குள் வீடு திரும்பி வருகிறார்கள்.

    • மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
    • தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.

    மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்த துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத் திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை முதற்கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்திற் குட்பட்ட 4 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண் களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன் னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் நாகர்கோ வில் மாநகராட்சி பகுதியில் ஏழகரம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட் டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நி லைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி, பரக்குன்னு ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பையஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், நாகர்கோவில் மாநகர்நல அலுவலர் டாக்டர் ராம் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெர பஞ்சோலை ஊராட்சி பாலப்பட்டி புதூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது .

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கபழனி பாலுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கவுன்சிலர் சித்ரா சரவணன் முன்னிலை வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மருத்துவ முகாமில் முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்தி ரைகளை வழங்கினார்கள்.

    முகாமில் பொது மக்க ளுக்கு இலவச முழுக்கவசம் வழங்கப்பட்டு பொது மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, சுப்பிரமணி உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது.
    • இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இதை 150 படுக்கை கொண்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்தி, மகப்பேறு, எழும்பு முறிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுநர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணி யாளர்கள், இரவு காவலர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    வாழப்பாடி ஒன்றியத்தில் மக்கள் தொகை 1.30 லட்ச மாக உயர்ந்துள்ள நிலையில், சிங்கிபுரம் மற்றும் புழு திக்குட்டை ஆகிய இரு இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் கலெக்டர் கார்மேகம் தலை மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், மக்கள் பிரதி நிதிகள் மற்றும் தன்னார்வ இயக்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கினர்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு பொன் பரப்பிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி ராஜா ஆதவன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் மனோகரன், சித்த மருத்துவர் செங்கோட்டுவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசினர்.

    முகாமில் மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ரத்த பரிசோதனைகள், எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    • வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த மாரியம்மன் புதூரில், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் உழவன் முருகன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை வாழப்பாடி உதவி இயக்குநர் மருத்துவர் முருகன் வரவேற்றார்.

    துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் முகாமை தொடங்கி வைத்தார். மாரியம்மன்புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு, கறவைமாடுகள், எருது மற்றும் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து, கால்நடை மருத்துவர்கள் செல்வராஜ், கோவிந்தன், கால்நடை பாராமரிப்பு உதவியாளர் மூர்த்தி, சுதாகர்

    ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், சினைப்பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட இலவச சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கன்றுகள் பேரணி நடத்தி, சிறப்பாக கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முகாமில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பாபு, சுரேஷ், செந்தில், முருகன், பார்த்திபன், தமிழ், பாஸ்கர், வசந்தா, ரஞ்சிதா, ராஜாத்தி, அருணா சந்திரா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • காதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

    ஏற்காடு:

    ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்களுக்கு வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முரு கன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உயர் ரத்த அழுத்தம், சக்கரைநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல், சளிக்கு மருந்து வழங்கப்பட்டது.

    பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஊழியர்களை பரிசோதித்த னர். இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் ஏற்பாடு களை செய்திருந்தார்.

    ×