search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    அண்ணாமலைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்

    அண்ணாமலைப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

    • ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு பொன் பரப்பிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி ராஜா ஆதவன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் மனோகரன், சித்த மருத்துவர் செங்கோட்டுவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசினர்.

    முகாமில் மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ரத்த பரிசோதனைகள், எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×