search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதிப்பு"

    • மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.
    • இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பச்சியண்ணன் (40). இவர் தேங்காய் நார் ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த 1-ந் தேதி ஓமலூர் போலீசாரால் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்தது.

    ஆன்லைனில் அதனை டவுன்லோட் செய்து பார்த்தபோது மொபட் ஓட்டும் ஒருவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால் இவர் புல்லட் வைத்துள்ளார். மேலும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பச்சியண்ணன் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மனு எழுதிக் கொடுத்தால் அதை சரி செய்து தருவதாக கூறினர். ஆனால் இதுவரை சரி செய்து கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு க்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர், துறைசார்ந்த அலுவலர்க ளுடன் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சென்ற மாதம் விபத்து களினால் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில் விபத்து கள் ஏற்படா வண்ணம் மேற் கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்தும், தற்போது விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.

    நாகர்கோவில் மாநகராட்சி யில் நெருக்கடி பகுதிகளான வடசேரி, கார்மல் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம், புன்னைநகர், பால்பண்ணை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், போக்குவரத்துத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் இட ஆய்வு செய்து, பணிகளை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை பலகைகள், வேகத்தடை அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் போட்டி ப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதம் விதிக்க போலீ சாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்திட நெடுஞ் சாலைத்து றைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, முக்கியமான சாலைகளில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் விபத்துகள் ஏற்படுவதை கருத்தி ல்கொண்டு, அந்தந்த பகுதி நகராட்சி ஆணை யாளர்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை யோரங்களி லுள்ள மரங்களில் ஒளிரும் வண்ண பூச்சுகள் மேற்கொள்ளுமாறும், சாலையோரங்களி லுள்ள மரங்களின் கிளைகள், மின்விளக்கு கள் மற்றும் மின்தடத்தில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அப்புறப் படுத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு சென்ற மாதம் 8141 நபர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிவதோடு, நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் போட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை –நிலமெடுப்பு) ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுரா மலிங்கம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்.3 கொமாரபாளையம் பஞ்சாயத்து கோம்பைக்காடு அண்ணாமலைப்பட்டி பகுதியில் அனுமதி இன்றி மலைகளை வெடி வைத்து தகர்த்து கற்கள் உற்பத்தி செய்தும் கிராவல் மண்ணை அள்ளிச் செல்லும் சம்பவம் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

    அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அளவுக்கு அதிகமாக கிராவல் மண் வெட்டி எடுத்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கிராவல் மண் வெட்டி எடுத்த தங்கம் என்பவரது மனைவி சித்தேஸ்வரிக்கு ரூ.19.84 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் ஆர்.டி.ஓ மஞ்சுளா உத்தரவிட்டார்.

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில்களில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடந்த ஜூலை மாதத்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 18 ஆயிரத்து 860 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
    • இதனை தொடர்ந்து, 26 அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து 10 கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று ஆத்தூர் டவுன், மகுடஞ்சாவடி பகுதிகளில் செயல்படும் 28 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 26 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேசன் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு துணை கமிஷனர் மாடசாமி தகவல் தெரிவித்தார்.
    • கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் சேலம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகாமில் வைத்து விபத்து வீடியோ மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த சிறப்பு முகாமில் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ஒரே ஒரு வாலிபர் மட்டும் ஹெல்மெட், ஓவர் ஸ்பீடு மூலம் ஒரு ஆண்டில் 120 முறை ஆட்டோமெட்டிங் கேமரா மூலம் ரூ.12 ஆயிரத்து 900 கட்டி உள்ளார். முதல் தடவை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு துணை கமிஷனர் மாடசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×