search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strict restrictions imposed"

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×