search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.டி.எம்."

    • பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
    • வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலிறுத்தல்

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் அதிகளவில் உள்ளன. அவை கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்து காணப்படுகிறது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அங்கு உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயலிழந்து நிலை யில் உள்ளது

    ஒருசில பகுதிகளில் ஏ.டி.எம். தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. சிலஇடங்களில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் ஊழிய ருக்கான சம்பளத்தை வங்கி கணக்கு வழியாகவே கையாள்கிறது.

    மேலும் வங்கிகள் வாடிக்கையாளருக்கான சேவையை அளிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தீபாவளி செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஏ.டி.எம். மையம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் முகப்பில் வாறுகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள் செல்லும்போது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ் புறத்தில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை ஓரம் இயங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் அதன் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.டி.எம். மையத்தின் முகப்பு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் செல்வதற்காக மரத்தால் ஆன நடைமேடை அமைக்கப்ப ட்டுள்ளது. நடைமேடையும் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சியளிக்கிறது. வயதானவர்கள் அதன் வழியே ஏறி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது. எனவே வாடிக்கை யாளரின் நலன் கருதி தரமான நடை மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கீழக்கரை ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.

    கீழக்கரை

    மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கீழக்கரையில் பல்வேறு வங்கி கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சேமிப்பு, நடப்பு கணக்குகள் வைத்துள்ளனர்.பெரும்பாலான வங்கிகள் தானியங்கி பணம் எடுக்கும் ஏ.டி.எம்.எந்திரங்களை நிறுவியுள்ளது.

    தற்போது இஸ்லாமி யர்களின் ரமலான் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் ரமலான் தேவைக்காகவும், ஸதகா, ஜகாத் தேவைக்கா கவும் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பார்கள்.

    கீழக்கரையில் செயல் படும் பல்வேறு வங்கிகளின் தானியங்கி எந்திரங்களில் பணம் எடுக்க முடியவில்லை.குறிப்பாக தேசிய மயமாக் கப்பட்ட பல்வேறு ஏ.டி.எம்.எந்திரங்களில் பணம் இருப்பதில்லை. இதில் ஆறுதலான ஒரு தகவல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் முறையாக செயல்படுகிறது.

    ரமலானை கருத்தில் கொண்டு கீழக்கரையில் செயல்படும் வங்கிகளின் அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை வைத்து முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
    • ஏ.டி.எம். மையங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிநகர் சந்திர மஹாலில் நடைபெற்றது, மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:-

    கண்காணிப்பு காமிராக்கள்

    ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண் காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட வேண்டும்,முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும்.

    மேலும் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப் படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.கொள்ளை யர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்த வேண்டும். அனைத்து வங்கி ஏ.எடி.எம். மையங்களிலும் பாதுகா வலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் (பொறுப்பு)சம்பத் தலைமையிலான காவல் துறையினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்ெபக்டர் ராஜாராம், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.

    அவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் . இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புளியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன்(வயது39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் பதிவு எண்ணை கைப்பற்றி விடிய, விடிய சோதனை
    • ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது.இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.

    நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.

    மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா? போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய் யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைதான வாலிபர் வாக்குமூலம்
    • இரணியலில் 3 இடங்களில் கைவரிசை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதே போல் அதேபகுதியில் உள்ள ஜுவல்லரி கடை மற்றும் செல்போன் கடை ஒன்றை உடைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இரணியல் சப் இன்ஸ்பெ க்டர் பாலசுந்தரம் தலைமை யிலான போலீசார் நெய்யூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த இன்னாசி லயோலா (வயது 29) என்பது தெரியவந்தது.

    இவர் திங்கள் நகரில் உள்ள ஏடிஎம் மையம், ஜுவல்லரி செல்போன் கடைகளில் கைவ ரிசை காட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் இன்னாசி லயோலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றேன்.ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஜுவல்லரி மற்றும் செல்போன் கடையை உடைத்ததாக தெரிவித்தார். போலீசார் இன்னாசி லயோலாவை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்?
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இதன் அருகே வீடுகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் அங்கிருந்த மானிட்டர், கேமரா ஆகியவற்றை உடைத்துள் ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.77 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.
    • ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

     மதுரை

    மதுரை தனக்கன்குளம், நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    சம்பவத்தன்று இவர் எஸ்.எஸ்.காலனி ஜவகர் தெருவுக்கு வந்தார். அங்குள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். எந்திரத்தில் பணம் வரவில்லை.

    இந்த நிைலயில் அங்கு வந்த 35 வயது பெண், 'நான் முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களின் கார்டை கொடுங்கள்' என்று கேட்டதும் ராஜகோபால் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதன் பிறகு அந்தப் பெண், வங்கி ரகசிய குறியீட்டு எண்ணை அறிந்து கொண்டு முயற்சி செய்தார்.

    ஆனால் பணம் வரவில்லை. இதையடுத்து அந்தப்பெண் ராஜகோபாலிடம் ஏ.டி.எம்.கார்டை திருப்பி கொடுத்தார். அதன் பிறகு ராஜகோபால் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு ஏ.டி.எம் மையத்தில் இருந்து ரூ.76 ஆயிரத்து 869 பணம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஏ.டி.எம். கார்டை சோதனை செய்து பார்த்தார். அப்போது தான் அது போலியானது என்பது தெரிய வந்தது.

    ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பெண், அதற்கு பதிலாக போலி கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, ராஜகோபாலிடம் ஏ.டி.எம். கார்டை அபகரித்து பண மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏ.டி.எம். அமைக்கப்படும் என்று மாநில பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகளுக்கு தேவையான சேவைகளையும் வழங்க முடியும்.

    பெரம்பலூர்:

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் தெரிவித்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட துணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்க ங்களின் மாநில பதிவாளர் சண்முக சுந்தரம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது :-

    கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பல்ேவறு சேவைகளையும் வழங்க முடியும்.

    கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்ப ணியிட ங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன் போன்ற சேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பதால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவ ருகின்றன.

    கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் இடங்களில் மட்டுமே ஏடிஎம் இயந்தி ரங்கள் பொருத்த முடியும் என்பதால் அது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
    • ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ''இந்தியா ஒன்'' என்ற தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் எடுக்கும் எந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து இன்று காலை ஆலம்பட்டி கிராம மக்கள் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற போது பணம் எடுக்கும் கருவி உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி இருக்கும் மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா? அல்லது மது போதையில் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் உடைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஏ.டி.எம். மைய அலுவலர்கள் வந்த பின்பு தான் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட இடத்தில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் ஆலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×