search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கங்கள் மூலம்  ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை
    X

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏ.டி.எம். அமைக்கப்படும் என்று மாநில பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • விவசாயிகளுக்கு தேவையான சேவைகளையும் வழங்க முடியும்.

    பெரம்பலூர்:

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் தெரிவித்தார்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட துணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டுறவு சங்க ங்களின் மாநில பதிவாளர் சண்முக சுந்தரம் செய்தியா ளர்களிடம் கூறியதாவது :-

    கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பல்ேவறு சேவைகளையும் வழங்க முடியும்.

    கூட்டுறவு கடன் சங்கங்களில் காலிப்ப ணியிட ங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன் போன்ற சேவைகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பதால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுவ ருகின்றன.

    கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் இடங்களில் மட்டுமே ஏடிஎம் இயந்தி ரங்கள் பொருத்த முடியும் என்பதால் அது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார்.

    Next Story
    ×