search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்தாமரைகுளம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
    X

    ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    தென்தாமரைகுளம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி

    • இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்?
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இதன் அருகே வீடுகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் அங்கிருந்த மானிட்டர், கேமரா ஆகியவற்றை உடைத்துள் ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×