search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் பகுதியில் சர்வர் கோளாறால் செயலிழந்த வங்கி ஏ.டி.எம்.கள்
    X

    சூலூர் பகுதியில் சர்வர் கோளாறால் செயலிழந்த வங்கி ஏ.டி.எம்.கள்

    • பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
    • வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலிறுத்தல்

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் அதிகளவில் உள்ளன. அவை கடந்த சில நாட்களாக சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்து காணப்படுகிறது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பெறும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அங்கு உள்ள பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை, செயலிழந்து நிலை யில் உள்ளது

    ஒருசில பகுதிகளில் ஏ.டி.எம். தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. சிலஇடங்களில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பெரும்பாலான தொழிற்சாலைகள் ஊழிய ருக்கான சம்பளத்தை வங்கி கணக்கு வழியாகவே கையாள்கிறது.

    மேலும் வங்கிகள் வாடிக்கையாளருக்கான சேவையை அளிக்க தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் தீபாவளி செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஏ.டி.எம். மையம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×