search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
    X

    தமிழ்நாடு போலீஸ் (கோப்பு படம்) 

    குமரியில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

    • சுசீந்திரத்திற்கு மீண்டும் ஜெயசந்திரன் நியமனம்
    • இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    நெல்லை சரகத்துக்குட் பட்ட போலீஸ் நிலையங்க ளில் பணியாற்றும் 19 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

    திருவட்டார் இன்ஸ் பெக்டர் ஷேக் அப்துல் காதர் நெல்லை மாவட் டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்தவர். மீண்டும் இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயசந் திரன் பதவியேற்க உள்ளார்.

    சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை சிட்டி எஸ்.பி. சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் இசக்கிதுறை கருங்கல் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    கொல்லங்கோடு இன்ஸ் பெக்டர் ராமா நெல்லை மாவட்ட சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டுள்ளார். மார்த் தாண்டம் போலீஸ் நிலை யத்தில் கடந்த ஒரு மாத காலமாக இன்ஸ்பெக் டர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்படுவதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×