search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்படைப்பு"

    • மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

    பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்.
    • அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சதீஷ்குமார் காதலியுடன் பிடிபட்டார். அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    • நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
    • 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.

    தாராபுரம்:

    தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.

    அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா். 

    • முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.
    • குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .

    மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    • இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி கொண்டா டப்படுவது வழக்கம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் ஜெயந்தி அன்று உருவச்சிலைக்கு அணிவிப்பதற்காக, 13 கிலோ எடை உடைய தங்க கவசத்தை வழங்கினார். இது தேவர் ஜெயந்தி தவிர மற்ற நாட்களில், மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசம் வழங்குவதில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கான தங்க கவசத்தை, ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்படி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து அதிகாரிகள் தங்க கவசத்தை பெற்று, பசும்பொன் கிராமத்தில் உள்ள உருவச்சிலைக்கு அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. காமாட்சி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை தங்க கவசத்துடன் மதுரைக்கு வந்தனர். அவர்கள் அண்ணாநகர் வங்கியில் மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ. சக்தி வேல் முன்னிலையில் முன்னிலையில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர்.

    • ஆட்டோவில் பெண் தவறவிட்ட பணத்தை டிரைவர் ஒப்படைத்தார்.
    • அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது.

    மதுரை

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி. இவர் குடும்பத்தினருடன் மதுரை வந்தார். அவர்கள் நேற்று இரவு ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்ேபாது சோனாலி நகை மற்றும் பணப்பையை ஞாபக மறதியாக ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கி விட்டார். அதன் பிறகு தான் இவருக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சோனாலி, இதுகுறித்து போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த வழியாக வந்த மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் சோனாலி நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோ குறித்து கண்காணிப்பு காமிரா உதவியுடன் தேடினர். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து சோனாலியிடம் பணப்பையை திரும்ப ஒப்படைத்தார். அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது. வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசை போக்குவரத்து போலீசார் பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்.

    • முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
    • இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்கோவில் என்ற இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பினர். உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரியப்படுத்தினர். தகவல் அறிந்த முதியவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்ராயன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்துள்ளார். முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    • கொரியர் நிறுவனங்களுக்கு எஸ்.பி. வேண்டுகோள்
    • கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்டபோதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனையை தடுக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? சப்ளையர் யார்? என்பது தொடர்பாக விசாரிக்கப் பட்டு தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீப காலமாக கொரியர் சர்வீஸ் மூலமும், பார்சல் சர்வீஸ் சென்டர்கள் மூலமும் கஞ்சா வருவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கொரியர் அலுவலகங்களில் எஸ்.பி., நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் நேற்று மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில், பார்சல் சர்வீஸ் மற்றும் கொரியர் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், போலீசார் மட்டும் கஞ்சா விற்பனையை தடுக்க முடி யாது. பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தற்போது போலீசார் சோதனை தீவிரமாகி உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து கொரியரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

    எனவே கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரியரில் பார்சல் அனுப்ப வருபவர்கள், பார்சலை பெற வருபர்வர்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதார், ஓட்டுநர் உரிமம்) வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொள்ளுங்கள்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உள்ளதா? என்பதை பரிசோதித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பார்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ, மேலும் சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் பார்சல்கள் இருந்தாலோ. உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    • வருவாய்த்துறையின் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டு உள்ள மின்னணு எந்திரங்களான 771 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 310 கட்டுப்பாட்டு கருவி என மொத்தம் 1081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த் துறையின் கண்காணிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கணபதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • பெருந்துறை பகுதியில் சுற்றி திரிந்த ஆதரவற்ற முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு.
    • பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதை அறிந்த சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அவரிடம் விசாரித்தார்.

    அப்போது அவர் நசியனூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (80) எனவும் டெய்லராக வேலை பார்த்து வந்ததும், இவரது மனைவி இறந்து விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சமூக ஆர்வலர் சொக்கலிங்கம் அந்த முதியவரை மீட்டு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பெருந்துறை போலீசார் அவரை ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதியோர் ஜெயபால் ஈரோட்டில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    ×