search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bodies"

    • 6 பேர் விடுமுறையை களிப்பதற்காக மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்புபள்ளம் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
    • பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது16). இவரது நண்பர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம்(16).

    ஜீவானந்தம், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் விடுமுறையை களிப்பதற்காக மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்புபள்ளம் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தண்ணீர் வரத்து அதிகரித்ததை பார்த்த மாணவர்கள் 4 பேர், நீந்தி கரைக்கு வந்து விட்டனர். ஜீவானந்தமும், கவுதமும் தண்ணீரில் சிக்கி தத்தளிக்க தொடங்கினர்.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

    மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. நேற்று இரவை தாண்டியும் மீட்பு பணி நடந்தது. ஆனால் உடல் மீட்கப்படவில்லை.

    இன்று 3-வது நாளாக வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை மேட்டுப்பாளையம் சாமனா பம்ப் அவுஸ் பகுதியில் இறந்த நிலையில் ஜீவானந்தம், கவுதம் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து வச்சினாம்பாளையம் பம்ப் அவுஸ் பகுதியில் நீரில் மூழ்கிய சகுந்தலா என்ற பெண்ணை தேடும் பணி 3-வது நாளாக நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

    இதனை தடுக்க பவானி ஆற்றங்கரையோரங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக உபகரணங்களுடன் கூடிய லைப் கார்டு ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ெதாடங்கி வைத்தார்.

    இந்த ஆம்புலன்சில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 10 காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். யாராவது ஆற்றில் சிக்கியதாக தகவல் வந்தால், உடனே இந்த குழுவினர் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன்(மேட்டுப்பாளையம்), குமார்(காரமடை), வேளாங்கண்ணி உதயரேகா(சிறுமுைக), ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருசில வார்டுகளில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர உள் நோயாளியாகவும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கால தாமதம்

    இங்கு ஒருசில வார்டு களில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    மாறாக அதே படுக்கையில் நீண்டநேரம் இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிறது. அதனை உடனடியாக வேறு தனி அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கோரிக்கை

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்கத்தின் தலைவர் முகமது அயூப், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இறந்தவர் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பணியாளர்கள் தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை

    குறிப்பிட்ட வார்டில் ஒரு நபர் இறந்து விட்டால் உடனடியாக வேறு ஒரு தனி அறைக்கு மாற்ற வேண்டும். அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கால தாமதப்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பொதுஜன நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    ×