search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க கவசம்"

    • அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.

    இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு டன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டு தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழாயொட்டி வங்கியில் இருந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க. பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வந்தார். பசும்பொன் தேவா் நினை விட பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள் முன்னிலையில் தேவா் சிலையில் இருந்த வெள்ளி கவசம் கலையப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் நினை வாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்கபட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.

    இதையடுத்து நினை விடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.

    மதுரை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் திருஉருவ சிலைக்கு தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

    குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.

    எனவே வருகிற 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தற்போதும் தங்க கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    • சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் மணக்குள விநாயகர்.
    • ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி அன்று உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கம்.

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. திருச்சி என்றதும் உச்சிப் பிள்ளையார் நினைவுக்கு வருவார். மதுரை என்றதும் தாய் மீனாட்சி கண்முன் வந்து நிற்பாள்.

    அது போலத்தான் புதுச்சேரி என்று சொன்னதுமே மணக்குள விநாயகர் `பளீர்' என எல்லாரது மனதிலும் தோன்றுவார். புதுச்சேரியின் நாயகனே இவர்தான்.

    புதுச்சேரி மக்களின் உயிரோடும், உணர்வோடும் இவர் இரண்டற கலந்துள்ளார். இதனால் புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதி மக்கள் மணக்குள விநயாகரை தங்கள் குல தெய்வமாகவும், கண் கண்ட தெய்வமாகவும் கருதுகிறார்கள்.

    மணக்குள விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யாமல் அவர்கள் எதையுமே செய்வதில்லை. குடும்பத்தில் திருமணம் நடைபெற இருந்தால் முதல் அழைப்பிதழை மணக்குள விநாயகருக்குத்தான் கொடுப்பார்கள்.

    குழந்தை பிறந்தால் தீட்டுக் காலம் முடிந்ததும், கோவிலுக்கு தூக்கி வந்து விடுவார்கள். மணக்குள விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கடலை போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டி மணக்குள விநாயகர் சன்னதி முன்பு படுக்க வைப்பார்கள். இதன் மூலம் தங்கள் குழந்தைக்கு விநாயகர் அருளாசி கிடைத்து விடுவதாக நம்புகிறார்கள்.

    இது மட்டுமல்ல புதிதாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, நிலம் வாங்குவதாக இருந்தாலும் சரி, வணிக ஒப்பந்தங்கள் போடுவதாக இருந்தாலும் சரி, புதிதாக கடை தொடங்குவதாக இருந்தாலும் சரி, மணக்குள விநாயகர் முன்பு ஆஜராகி விட்டுத்தான் எதையும் செய்வார்கள்.

    விவசாயிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர் கள், பெண்கள் என்று எல்லாருமே மணக்குள விநாயகரை முன் வைத்தே எதையும் செய்வது உண்டு. இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளும் விலக்கல்ல.

    புதுச்சேரி அரசியல்வாதிகளில் 99 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்வதில் தொடங்கி பதவி ஏற்பது வரை ஒவ்வொரு தடவையும் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வந்து ஆசி பெற்ற பின்பே செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அது போல புதுச்சேரியில் முதல்-மந்திரியாக இருப்பவர்கள் தலைமை செயலகத்துக்கு செல்லும் போது, மணக்குள விநாயகரை பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு போக தவறுவது இல்லை.

    புதுச்சேரியில் உள்ள இந்துக்கள் மட்டும்தான் இப்படி மணக்குள விநாயகரிடம் மனதை பறிகொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களுக்கு நிகராக மணக்குள விநாயகரை வணங்கி ஆசி பெற்று செல்வது மிகச் சிறந்த மத ஒற்றுமைக்கு எடுத்துக் கட்டாக உள்ளது.

    மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு வரும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அர்ச்சனை செய்தும் வழிபட தவறுவதில்லை. சில கிறிஸ்தவர்கள் சூறைத் தேங்காய் எல்லாம் உடைப்பது உண்டாம்.

    புதுச்சேரி முதல்-மந்திரியாக இருந்த ஒரு தலைவர் தான் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், முக்கிய நாட்களில் தன் மகளை மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு அனுப்பி வழிபாடுகள் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். இதன் மூலம் மணக்குள விநாயகர் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொருவரையும் சாதி, மதம் கடந்து ஈர்த்து வைத்துள்ளார் என்பது புரிகிறது.

    அதனால்தான் புதுச்சேரியில் வாகனம் வாங்குபவர்கள் முதலில் அதை நேராக மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு ஓட்டி வந்து பூஜை போடுவார்கள். அந்த வகையில் தினமும் குறைந்தபட்சம் 100 மோட்டார் சைக்கிள்களுக்கு பூஜை போடப்படுகிறது.

    விசேஷ நாட்களில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக் கிள்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் வந்து விடும் என்று கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

    அவ்வளவு ஏன்.... வெளியூருக்கு அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்வதாக இருந்தாலும் புதுச்சேரி மக்கள் மணக்குள விநாயகரைப் பார்த்து வணங்கி விடைபெற்றுச் செல்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மணக்குள விநாயகரை நம்புகிறார்கள்.

    அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தும்பிக்கையானும் புதுச்சேரி வாழ் மக்களை கண்ணை, இமை காப்பது போல காத்து வருகிறார்.

    திருத்தங்கத்தேர்

    5-10-2004ல் சுமார் 70 லட்சம் மதிப்பில் நகாசு வேலைப்பாடுடன் கூடிய புதிய தங்கத் தேர் செய்யப்பட்டு விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமி தினத்தில் ஸ்ரீவிநாயகர் உற்சவமூர்த்தி தங்கத்தேரில் வீதி உலா வருவது வழக்கமாக இருக்கிறது. உபயதாரர் விரும்பும் நாட்களில் கட்டணம் செலுத்தினால் வெள்ளித்தேரும், தங்கத் தேரும் கோவிலின் உட்பிரகாரத்தில் மூன்று முறை உலா வரும் உற்சவம் நடைபெறுகின்றது.

    விநாயகர் அந்த நேரங்களில் வீதியுலா வந்து விண்ணவரையும், மண்ணவரையும் மகிழ்விக்கின்றார். விக்கினங்கள் நீக்கும் விநாயகரை நினைத்து எந்த நற்காரியங்கள் செய்தாலும் இடையூறு நீங்கப் பெற்று, காரிய சித்தி ஏற்படும் என்பது திண்ணம்.

    மூலவர் தங்க கவசம்

    13-06-2008 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் அருள்மிகு மணக்குள விநாயகர் மூலவருக்குத் தங்கக் கவசம் சார்த்தும் விழா முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

    மூலவருக்கு `தங்கக் கவசம்' சுமார் 10 கிலோ எடையில் உருவானது. 916.7 தங்கத்தில், ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களால் அது அமையும் பக்தர்கள் விருப்பத்திற்கிணங்க ரூ.3 ஆயிரம் மட்டும் செலுத்தி தமது குடும்பத்தாருடன் தனியே நவகலாசாபிஷேகம் செய்து மூலவர் தங்கக் கவசம் சார்த்தி வழிபடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

    உற்சவர் தங்க கவசம்

    02-03-2011 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மணக்குள விநாயகர் உற்சவ மூர்த்திக்கு தங்கக் கவசம் சார்த்தும் விழா பல முக்கியஸ்தர்கள், நன்கொடையாளர்கள், பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது. உற்சவருக்கு தங்கக் கவசம் சுமார் 5 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டது. கூடுதாக ஒரு வில்வமாலை சுமார் 1 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது. 916.7 தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையுடன் நகாஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய 14 உறுப்புக்களாக அந்தக் கவசம் இருக்கிறது.

    • மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    • மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது.

    விதர்ப்ப தேசத்தில் ஆதேயம் என்ற நகரம் இருந்தது. அங்கே வீமன் என்ற வேடன் வசித்து வந்தான்.

    தீமைகளையே தொழிலாகக் கொண்டிருந்த அவன் கொலை, கொள்ளை போன்ற கெட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தான். இந்நிலையில் ஒருநாள் வெளியூர் பிராமணர்கள் சிலர் ஆதேயம் நகரில் நடந்த கோவில் திருவிழாவை காண வந்தனர்.

    வீமன் அவர்களிடமிருந்த பொருட்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை கொலையும் செய்து விட்டான். அதனால் வீமனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

    வீமனைப் போல கொலை, கொள்ளையில் தேர்ந்த ராட்சதன் வீமனிடம் பொருட்களைக் கொள்ளையடிக்க வந்தான். அவனைக் கண்டு வீமன் பயந்து காட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த வன்னிமரம் ஒன்றில் ஏறி ஒளிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியில் விநாயகர் இருந்தார்.

    வீமன் ஏறிய வேகத்தில் வன்னிமர இலை ஒன்று உதிர்ந்து விநாயகரின் காலடியில் விழுந்தது. இதனிடையே வீமனைத் துரத்தி வந்த ராட்சதனும் மரத்தில் ஏறினான்.

    இதனால் மரத்தின் கிளைகள் அசைந்து மேலும் வன்னி இலைகள் விநாயகர் காலில் விழுந்தன. மேலும் மரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கை கலப்பின்போது மரத்தில் இருந்து இலைகள் கீழே இருந்த விநாயகர் மீது விழுந்தன.

    பின்னர் அவர்கள் இருவருமே மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார்கள். அப்போது வன்னி இலைகள் விநாயகரின் மேல் பட்டதனால் அவர்கள் செய்த திவினைகள் அழிந்து போய் தெய்வ உருவம் பெற்றனர்.

    விநாயகப் பெருமானின் அருளால் தெய்வலோகத்தில் இருந்து தங்க விமானம் வந்தது. அதில் ஏறி கணேசருலகத்தை அடைந்து பெரு வாழ்வு பெற்றனர்.

    தொப்பை இல்லாத ஆதி விநாயகர்

    விநாயகர் என்றதும் யானைத்தலை, பானை வயிறு இந்த இரண்டும்தான் நமக்கு நினைவுக்கு வரும். நன்கு உன்னிப்பாக பார்த்தால் யானைக்கு இருப்பது போன்று சிறிய கண்கள், விசிறி போன்று காது, ஒடிந்த நிலையில் ஒரு தந்தம், திறனை வெளிப்படுத்தும் துதிக்கை, கொஞ்சமாக பேச வேண்டும் என்பதை உணர்த்தும் சிறிய வாய் போன்றவற்றை பார்க்கலாம்.

    விநாயகரின் தோற்றத்தை மேலும் ரசித்தால் அவரது நான்கு கரங்கள் என்னென்ன சுமந்து கொண்டிருக்கிறது? துதிக்கை இடம் சுழியாக உள்ளதா அல்லது வலஞ்சுழியாக உள்ளதா என்பதை எல்லாம் பார்த்து கண்டு களிக்கலாம்.

    இத்தகைய வித்தியாசமான உருவமைப்புடன் உள்ள விநாயகரைப் பார்க்கும் போது அவரை கொஞ்ச வேண்டும் போல் தோன்றும். மணக்குள விநாயகரும் இப்படித்தான் இருப்பார் என்று நீங்கள் நினைத்தால், அது தவறாகும்.

    ஏனெனில் மணக்குள விநாயகருக்கு தொப்பை கிடையாது. அவரது உருவமும் மற்ற விநாயகர் சிலை அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    இதுபற்றி ஆலய குருக்களில் ஒருவர் கூறியதாவது:-

    மணக்குள விநாயகர் சிலை எத்தனையோ பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் உருவ அமைப்பு எங்களுக்கே ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மிக அருகில் இருந்து நுட்பமாக பார்த்தால்தான் அந்த வித்தியாசம் தெரியும்.

    அந்த விநாயகரின் வடிவம் தொன்மைக் கால சிற்பக் கலை நுணுக்கத்தோடு உள்ளது. விநாயகர் உடல் மெலிந்த உடல்வாகு போன்றிருக்கும்.

    தன் இரண்டு கால்களையும் மடக்கி சப்பணம் போட்டு அமர்ந்த கோலத்தில் அவர் உள்ளார். இத்தகைய உருவ அமைப்பில் உலகில் வேறு எங்கும் விநாயகர் சிலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    இவர் குறிப்பிடும் விநாயகர் தற்போது ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரைத்தான் பிரெஞ்சுக்காரர்கள் கருவறையில் இருந்து பெயர்த்து படகில் எடுத்துச் சென்று கடலில் தூக்கி வீசினார்கள். ஆனால் அவர் கரை திரும்பி இருந்த இடத்துக்கே வந்து விட்டார்.

    வெள்ளைக்காரர்களின் கை, இவர் மீது பட்டதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாக நீண்ட நாட்களாக பக்தர்களும், சமயப் பெரியவர்களும் கூறி வந்தனர். அதற்கான பரிகாரங் கள் செய்யப்பட்டாலும் அந்த விநாயகரை மீண்டும் வெள்ளைக் காரர்கள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற பயம் புதுச்சேரி மக்களிடம் இருந்து கொண்டே இருந்தது.

    இந்த நிலையில்தான் தொள்ளைக் காது சித்தர் ஜீவசமாதி ஆனார். அவரது உடல் மணல் குளத்தின் மேற்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதும் விநாயகர் கோவில் வழிபாடுகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆகம விதிப்படி வழிபாடுகள் நடைபெற தொடங்கின.

    அப்போது ஆகம விதிப்படி வெளிநாட்டவர் கைபட்ட சிலை தீட்டுப்பட்டது என்றும் எனவே வேறொரு புதிய விநாயகர் சிலையை கருவறையில் ஸ்தாபிதம் செய்ய வேண்டும் என்றும் சமயச் சான்றோர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து வழிபாட்டுக்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் மற்றொரு விநாயகர் சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்ததாக கருதப்படுகிறது. அன்று முதல் ஆலய கருவறையில் இரண்டு விநாயகர்கள் உள்ளார்கள். பிரெஞ்சுக்காரர்களால் கடத்தப்பட்டு மீண்டு வந்த விநாயகர் ஆதி விநாயகர் என்றும், புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட விநாயகர் மூல விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    கருவறையில் உள்ள இந்த இரு விநாயகர்களுக்கும் ஒரே மாதிரி அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த தடவை நீங்கள் மணக்குள விநாயகர் ஆலயத்துக்கு செல்லும் போது உன்னிப்பாகப் பாருங்கள். அருகருகே இரு விநாயகர்கள் இருப்பது தெரியும்.

    மூல விநாயகராக எழுந்தருளி உள்ள புதிய விநாயகரின் இடது கைப்பக்கம் ஆதிவிநாயகர் உள்ளார். இவரை முதன்மை முதல்வன் என்றும் அழைத்து சிறப்பிக்கிறார்கள்.

    மூல விநாயகரின் வலது பக்கத்தில் நாகபந்த சிலை உள்ளது. இந்த சிலையும் பல நூற்றாண்டுகளாக நெசவாளர்களால் மணல் குளத்தங்கரை ஒரத்தில் இருந்த அரச மரத்தடியில் வைத்து வணங்கப்பட்ட சிலையாகும். இந்த மூவருக்கும் ஒரே மாதிரி அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    • இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
    • பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் கோவில் அமைக்கப்பட்டது.

    கோவில் முன்புறம் கோவில் நுழைவில் மண்டபம் சிறப்புற அமைக்கப்பட்டு அங்கே கோவில் யானை கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் மேல் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதன் இருபுறமும் காளை சிலைகள் மற்றும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்புறம் மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    முந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைக்க, பிரெஞ்சு ஆதிக்கத்தால், பாண்டிச்சேரி மக்கள் மிகுந்த தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் இக்கோவில் அமைக்கப்பட்டது.

    ராஜகோபுர நுழைவாயிலுக்கு நேரரே தங்கமுலாம் பூசிய கொடி மரமும் மணக்குள விநயாகர் கருவறையும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் மூன்றடக்கில் சிலைகள் அமைந்துள்ளன. மல்புறத்தில் இருந்து முதல் வரிசையில் இடப்புறம் முருகப்பெருமான் தன் வாகனமாகிய மயிலுடன் நின்கிறார். வலதுபுறம் விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.

    முருகன் அருகிலும் ஒரு மூசிகம். விநாயகர் அருகிலும் ஒரு மூசிகம் மூன்றாவது அடுக்கில் இருபுறமும் காளையும் பூதகணங்களும் உள்ளன. நடுப்பகுதியில், நடுநாயகமாக, வட்டவடிவ பின்னணி அமைப்பில், நர்த்தன விநாயகர் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளார்.

    ராஜகோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய வாயிலின் மேல்புறம், அமர்ந்த கோலத்தில் விநாயகரும் பூதகணங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

    உள்ளே நுழைந்து வரிசையில் சென்று மூலவர் மணக்குள விநாயகரை தரிசிக்க வேண்டும். மூலவரை தரிசிக்க நுழையவும் வெளியில் வரவும் தனித்தனி வழிகள் உள்ளன.

    மூலவர் இருக்கும் கருவறை சுமார் இருபது இருபந்தைந்து சதுர அடியில் அமைந்திருக்கிறது. விமானம் தங்கத்தால் ஆனது. மணக்குள விநாயகர் அமர்ந்த நிலையில் மேல்புறமுள்ள இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.

    கீழே உள்ள இரு கரங்களில், வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கையில் விரதன முத்திரையுடனும் விளங்குகிறார். கருவறையில் மற்றுமொரு சிறிய கணபதியையும் நாகர்களின் திருவுருவங்களையும் காணலாம்.

    மூலவர் மணக்குள விநாயகருக்கு தங்க கவசமும், வெள்ளி கவசமும் சாத்தி முக்கிய விழா நாட்களில் வழிபாடு செய்யப்படுகிறது.

    • காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன.
    • வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது.

    திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது

    இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில:

    தேவாரம் பாடிய மூவர், திருவாதவூர் அடிகள், நூலாசிரியரின் குரு சத்திய ஞானி, திருப்பணி செய்த யாதவ வேந்தன், வடநூலைத் தனக்கு மொழிபெயர்த்து உதவிய சங்கரநாராயணன் என்னும் வாரைவாழ் புராணிகர் முதலானோருக்குப் பாயிரப் பகுதியில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

    சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடி உத்திரம், ஆவணி ஓணம், புரட்டாசி புரட்டை, ஐப்பசி அச்சுவதி, கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் காளத்திநாதரை வழிபடுவதற்கு உரிய நன்னாள்கள் எனக் கூறப்பட்டுள்ளன.

    1 போற்றிப் பாடல்

    நீயே வினைமுதல் நீயே கரணமும்

    நீயே கரணம், நீயே காரியம்

    நீயே தருபவன், நீயே சான்று உரு

    நீயே இவையுள் நீங்கினை சயசய

    2 நல்லொழுக்கம் கூறும் பாடல்

    ஓதனத்துக்கு உரியது ஒருபொருள்

    யாது உண்டு என்னதை இத்துணை நாளைக்கும்

    போதும் ஈது என்று உவந்து பொறுத்துத்

    தீது இல் தானியம் ஓம்புக சீர் பெற.

    • தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.
    • பல்லவர் காலத்தில் இருந்த கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.

    திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

    வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோவிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

    வரலாறு

    இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோவிலான காளஹஸ்தி கோவில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப்பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோவிலுக்கு அளித்துள்ளனர்.

    பல்லவர் காலத்தில் இருந்த இக்கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோவில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கி.பி. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக்கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

    • ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.
    • மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.

    ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில், பஞ்சபூத தலங்களில் ஒன்றான, புகழ்பெற்ற வாயு லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் காளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.

    மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த கவசத்தின் தலைப் பகுதியில் சூரியன், சந்திரன், அக்னியும், கீழே 9 படிகளில் நவ கிரகங்களும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. 9 கிரகங்களுக்கும் முத்து, பவளம், நீலம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், ரூபி, எமரால்டு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    2009-ம் ஆண்டு இந்த தங்க கவசம் பூப்பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து முடிந்த பிறகு இந்த தங்கக் கவசம் சார்த்தப்பட்டது.

    அதற்கு முன்பு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த தங்க முலாம் பூசிய 3 வெள்ளிக் கவசங்கள் மட்டுமே இதுவரை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நாளை தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் புத்தாண்டு அன்று தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.

    நடப்பு ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு நாளை (14-ந் தேதி) வரவுள்ளது. இதையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி-தெய்வானைக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதே போல் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    தமிழ் புத்தாண்டு என்பதால் நாளை சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருவார்கள். இதனால் திருப்பரங் குன்றத்தில் பல இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு போலீசார் கண்காத்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் மதுரை வங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.
    • இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி கொண்டா டப்படுவது வழக்கம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் ஜெயந்தி அன்று உருவச்சிலைக்கு அணிவிப்பதற்காக, 13 கிலோ எடை உடைய தங்க கவசத்தை வழங்கினார். இது தேவர் ஜெயந்தி தவிர மற்ற நாட்களில், மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவுக்கு தங்க கவசம் வழங்குவதில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். அணிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவருக்கான தங்க கவசத்தை, ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதன்படி மதுரை அண்ணாநகர் வங்கியில் இருந்து அதிகாரிகள் தங்க கவசத்தை பெற்று, பசும்பொன் கிராமத்தில் உள்ள உருவச்சிலைக்கு அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட இருந்தது.

    இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ. காமாட்சி தலைமையில் அதிகாரிகள் இன்று காலை தங்க கவசத்துடன் மதுரைக்கு வந்தனர். அவர்கள் அண்ணாநகர் வங்கியில் மதுரை மாவட்ட டி.ஆர்.ஓ. சக்தி வேல் முன்னிலையில் முன்னிலையில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர்.

    • தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை விடுத்தனர்.
    • 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் தேவர் தேசபக்த முன்னணி நிர்வாகிகளான முருகன், ஞானசேகரன், கவிக்குமார் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க கடந்த 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது. அப்போது அன்றைய அரசு தங்கக் கவசத்தை கலெக்டர் வசம் ஒப்படைத்தது. இப்போது அ.தி.மு.க. மீண்டும் 2 அணிகளாக பிரிந்துள்ளது.

    2017-ம் ஆண்டு எடுத்த முடிவின்படி கலெக்டரே தங்ககவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×