search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manakkula Ganesha"

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
    • உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபி ஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடை விடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப் பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    சதூர்த்தி விழாவை யொட்டி புதுவை கொசப்பாளையம் முத்து விநாயகர், காராமணிக் குப்பம் சுந்தர விநாயகர், முத்தியால்பேட்டை ஆதி விநாயகர், தேங்காய்திட்டு வரசித்தி விநாயகர், முதலி யார்பேட்டை ஜெயகுண்ட விநாயகர், ஆதிங்கப்பட்டு கற்பூர சுந்தர விநாயகர், சாரம் முத்து விநாயகர், தட்டாஞ்சாவடி கற்பக விநாயகர், சொக்கநாத விநாயகர் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும், விநாயகர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    • ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
    • வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும் ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்

    அகரமென அறிவாகி உலக மெங்கும் அமர்ந்தகர உகரமக ரங்கள் தம்மால்

    பகரு மொரு முதலாகி வேறு மாகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு

    புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப் போற்று நரக் கறக்கருணை புரிந்தல்லார்க்கு நிகரில் மறக் கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்.

    வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்

    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க

    ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய்

    ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்

    விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே

    தெண்டுள தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திருவேன்

    பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுதகற்றித்

    தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

    திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்

    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

    காதலால் கூப்புவர்தம் கை.

    மார னெடுத்து வளைக்கு மொரு கரும்கை யடித்து மலர்சிதறி

    நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி

    வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும்

    ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்.

    உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதி யாகத்

    தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்

    கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்

    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு வினைகள் தீர்ப்பாம்.

    வஞ்சகக்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கா உன்றே

    அஞ்சரண மூன்றானை மறை சொலு நால் வாயானை அத்தனாகித்

    துஞ்சவுணர்க் கஞ்சானைச் பென்னியணி ஆறானைத் துகளெ ழானைச்

    செஞ்சொன்மறைக் கொட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.

    வணக்குதலை மனத்தியற்றி வாழ்த்துமடி யவர்விரும்பும் வரங்கள் ஈத்து

    பிணக்குடனே வேற்றுவர்கள் அகற்றிடவும் அகலாது பெட்பில் நின்று

    நினைக்குமிடத் துன்புயிர் கட்(கு) ஒரித்தருளிப் புதுவையிடை நிலைபெற்றோங்கும்

    மணக்குள நாயகன் மலரடியை எப்போதும் மனத்துள் வைப்பாம்.

    மன்னியசீர்ப் புதுவை நகர் மணக்குள விநாயகன்றன் மாண்பு மேவும்

    பொன்னடியை எந்நாளும் சிந்தித்து வணங்கிமிகப் புகழ்ந்து வாழ்வோர்

    துன்னிரிய பெருஞ்செல்வம் இவ்வுலகில் எஞ்ஞான்றும் தோயப் பெற்றங்

    குன்னிரிய பேரின்பம் ஒவாதே யெய்தியினி துவந்த வாழ்வார்.

    • புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி குழுவினர் சார்பில் 25-ம் ஆண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருப்பள்ளி அறையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது

    தொடர்ந்து, தங்கத்தேரில் விநாயகர் கோவிலில் வலம் வந்தார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பள்ளியெழுச்சி தலைவர் இளங்கோ மற்றும் கோவில் நிர்வாக தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×