search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    விநாயகர் துதிகள்
    X

    விநாயகர் துதிகள்

    • ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
    • வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும் ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்

    அகரமென அறிவாகி உலக மெங்கும் அமர்ந்தகர உகரமக ரங்கள் தம்மால்

    பகரு மொரு முதலாகி வேறு மாகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு

    புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப் போற்று நரக் கறக்கருணை புரிந்தல்லார்க்கு நிகரில் மறக் கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்.

    வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்

    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க

    ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய்

    ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்

    விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே

    தெண்டுள தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திருவேன்

    பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுதகற்றித்

    தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

    திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்

    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

    காதலால் கூப்புவர்தம் கை.

    மார னெடுத்து வளைக்கு மொரு கரும்கை யடித்து மலர்சிதறி

    நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி

    வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும்

    ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்.

    உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதி யாகத்

    தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்

    கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்

    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு வினைகள் தீர்ப்பாம்.

    வஞ்சகக்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கா உன்றே

    அஞ்சரண மூன்றானை மறை சொலு நால் வாயானை அத்தனாகித்

    துஞ்சவுணர்க் கஞ்சானைச் பென்னியணி ஆறானைத் துகளெ ழானைச்

    செஞ்சொன்மறைக் கொட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.

    வணக்குதலை மனத்தியற்றி வாழ்த்துமடி யவர்விரும்பும் வரங்கள் ஈத்து

    பிணக்குடனே வேற்றுவர்கள் அகற்றிடவும் அகலாது பெட்பில் நின்று

    நினைக்குமிடத் துன்புயிர் கட்(கு) ஒரித்தருளிப் புதுவையிடை நிலைபெற்றோங்கும்

    மணக்குள நாயகன் மலரடியை எப்போதும் மனத்துள் வைப்பாம்.

    மன்னியசீர்ப் புதுவை நகர் மணக்குள விநாயகன்றன் மாண்பு மேவும்

    பொன்னடியை எந்நாளும் சிந்தித்து வணங்கிமிகப் புகழ்ந்து வாழ்வோர்

    துன்னிரிய பெருஞ்செல்வம் இவ்வுலகில் எஞ்ஞான்றும் தோயப் பெற்றங்

    குன்னிரிய பேரின்பம் ஒவாதே யெய்தியினி துவந்த வாழ்வார்.

    Next Story
    ×