search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diamond Crown"

    • உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    • மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்; சொக்கநாதபெருமானுக்கு வைர நெற்றிப்பட்டை தீபாவளி அன்று அணிவிக்கப்படுகிறது.
    • வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீதீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) ஐப்பசி பூரம் நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் உச்சிகாலத்தில் ஆலவட்டத்துடன் உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேருவார்.

    வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடக்கிறது. 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் சுற்றி வந்த பிறகு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச்சாவடி சேருவார்.

    29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் வௌ்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வீதி உலா நடைபெறும்.

    ஐப்பசி விழாவின் 6-ம் நாளான 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிசப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கந்த சஷ்டி உற்சவம் நடைபெறும். 31-ந் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வௌ்ளிக்கவசம் மற்றும் பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் ேததி முதல் 8-ந் தேதி வரை பவித்திர உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். 8-ந் தேதி உச்சி காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும்.

    ஐப்பசி மாத திருவிழாவை யொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் ேததி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், துணை ஆணையர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • சத்தியநாராயண சாமி கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர்.
    • 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சத்தியநாராயண சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர். 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.

    இந்த கிரீடம் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 கோடி என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×