search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்; சொக்கநாதபெருமானுக்கு வைர நெற்றிப்பட்டை
    X

    மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்; சொக்கநாதபெருமானுக்கு வைர நெற்றிப்பட்டை

    • மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்; சொக்கநாதபெருமானுக்கு வைர நெற்றிப்பட்டை தீபாவளி அன்று அணிவிக்கப்படுகிறது.
    • வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீதீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் குறித்த விவரம் வருமாறு:-

    வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) ஐப்பசி பூரம் நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் உச்சிகாலத்தில் ஆலவட்டத்துடன் உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேருவார்.

    வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை அன்று கால, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும்.

    25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடக்கிறது. 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் சுற்றி வந்த பிறகு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச்சாவடி சேருவார்.

    29-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் வௌ்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வீதி உலா நடைபெறும்.

    ஐப்பசி விழாவின் 6-ம் நாளான 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிசப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கந்த சஷ்டி உற்சவம் நடைபெறும். 31-ந் தேதி காலை 7 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வௌ்ளிக்கவசம் மற்றும் பாவாடை சாத்துப்படியும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் ேததி முதல் 8-ந் தேதி வரை பவித்திர உற்சவம் நடக்கிறது. இந்த உற்சவத்தில் சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். 8-ந் தேதி உச்சி காலத்தில் சொக்கலிங்கப் பெருமானுக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும்.

    ஐப்பசி மாத திருவிழாவை யொட்டி வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் ேததி வரை மீனாட்சி அம்மன் கோவிலில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகியவை நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், துணை ஆணையர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×