search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden Armour"

    • அ.தி.மு.க. சார்பில் தேவா் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
    • முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சாா்பில் 2014-ம் ஆண்டு ரூ.4.50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அணி வித்தாா்.

    இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, போலீஸ் பாதுகாப்பு டன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்து வரப்பட்டு தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குரு பூஜை விழாயொட்டி வங்கியில் இருந்த தங்கக் கவசத்தை அ.தி.மு.க. பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வந்தார். பசும்பொன் தேவா் நினை விட பொறுப்பாளா் காந்தி மீனாள் அம்மாள் முன்னிலையில் தேவா் சிலையில் இருந்த வெள்ளி கவசம் கலையப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் நினை வாலய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று முதல் தேவர் நினைவிடத்தில் தங்ககவசம் ஒருவாரம் அணிவிக்கபட்டு அடுத்த வாரம் மதுரை வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்படும்.

    இதையடுத்து நினை விடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    புதுவையின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    மூலவர் மற்றும் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், அமெரிக்க வைர கீரிடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்து வணங்கினர்.

    சதுர்த்தியையொட்டி தனி நபர் அர்ச்சனைகள், விசேஷ பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் சர்வ திவ்ய தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதற்காக 30 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு திறக்கப்படும். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது.

    • மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
    • நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ×