என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
மணக்குள விநாயாகர் கோவில் அமைப்பு
- இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
- பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் கோவில் அமைக்கப்பட்டது.
கோவில் முன்புறம் கோவில் நுழைவில் மண்டபம் சிறப்புற அமைக்கப்பட்டு அங்கே கோவில் யானை கட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் மேல் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு அதன் இருபுறமும் காளை சிலைகள் மற்றும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் கீழ்புறம் மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
முந்நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைக்க, பிரெஞ்சு ஆதிக்கத்தால், பாண்டிச்சேரி மக்கள் மிகுந்த தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் பிரெங்சுக்காரர்களின் ஆதரவுடன் இக்கோவில் அமைக்கப்பட்டது.
ராஜகோபுர நுழைவாயிலுக்கு நேரரே தங்கமுலாம் பூசிய கொடி மரமும் மணக்குள விநயாகர் கருவறையும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தில் மூன்றடக்கில் சிலைகள் அமைந்துள்ளன. மல்புறத்தில் இருந்து முதல் வரிசையில் இடப்புறம் முருகப்பெருமான் தன் வாகனமாகிய மயிலுடன் நின்கிறார். வலதுபுறம் விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.
முருகன் அருகிலும் ஒரு மூசிகம். விநாயகர் அருகிலும் ஒரு மூசிகம் மூன்றாவது அடுக்கில் இருபுறமும் காளையும் பூதகணங்களும் உள்ளன. நடுப்பகுதியில், நடுநாயகமாக, வட்டவடிவ பின்னணி அமைப்பில், நர்த்தன விநாயகர் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளார்.
ராஜகோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய வாயிலின் மேல்புறம், அமர்ந்த கோலத்தில் விநாயகரும் பூதகணங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
உள்ளே நுழைந்து வரிசையில் சென்று மூலவர் மணக்குள விநாயகரை தரிசிக்க வேண்டும். மூலவரை தரிசிக்க நுழையவும் வெளியில் வரவும் தனித்தனி வழிகள் உள்ளன.
மூலவர் இருக்கும் கருவறை சுமார் இருபது இருபந்தைந்து சதுர அடியில் அமைந்திருக்கிறது. விமானம் தங்கத்தால் ஆனது. மணக்குள விநாயகர் அமர்ந்த நிலையில் மேல்புறமுள்ள இரு கரங்களில் அங்குசமும் பாசமும் கொண்டுள்ளார்.
கீழே உள்ள இரு கரங்களில், வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கையில் விரதன முத்திரையுடனும் விளங்குகிறார். கருவறையில் மற்றுமொரு சிறிய கணபதியையும் நாகர்களின் திருவுருவங்களையும் காணலாம்.
மூலவர் மணக்குள விநாயகருக்கு தங்க கவசமும், வெள்ளி கவசமும் சாத்தி முக்கிய விழா நாட்களில் வழிபாடு செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்