search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணிய சுவாமி"

    • ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்காரத்தெ ருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு நாளை தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு தமிழ் புத்தாண்டு அன்று தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் சாற்றப்படுவது வழக்கம்.

    நடப்பு ஆண்டுக்கான தமிழ் புத்தாண்டு நாளை (14-ந் தேதி) வரவுள்ளது. இதையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி-தெய்வானைக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    இதே போல் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்படுகிறது.

    தமிழ் புத்தாண்டு என்பதால் நாளை சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருவார்கள். இதனால் திருப்பரங் குன்றத்தில் பல இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப் பட்டு போலீசார் கண்காத்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×