என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganda Shasti"
- ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
- கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூக்காரத்தெ ருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
- அன்னதானம் நடைபெற்றது
- முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது
காவேரிப்பாக்கம்:
நெமிலி பாலா பீடத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதியில் 25-வது கந்த சஷ்டி விழா தொடங்கியது.அன்னை பாலாவுக்கும், வள்ளி தெய்வயானை உடனுறை முருகனுக்கும் பாலாபீடத்தில் நிர்வாகி மோகன்ஜி ஷண்முக தீபம் ஏற்றி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஆராதனையை செய்தார்.
கந்த சஷ்டி விழாவுக்காகவே பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி எழுதி, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம், சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் என்ற இசைகுறுந்தகட்டின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது. குருஜி பாபாஜி சண்முக மந்திரம் ஓதினார்.
விழாவுக்கு திரளாக வந்த அன்பர்களுக்கு வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிறைவாக பாலாபீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்