search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில்மிஷம்"

    • போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீசாரை கைது செய்தனர்.
    • போலீசார் வர தாமதமானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் உடையனாம்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலராக வேலை பார்க்கும் பெரியதம்பி என்பவர் போலீஸ் உடையில் சித்தலக்குண்டு பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

    அவர் பஸ்சுக்குள் வந்து நின்ற போது குடி போதையில் இருப்பதை பார்த்து பயணிகள் முகம் சுளித்தனர். அப்போது அவர் நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளிகாட்டி கொள்ளாமல் குலசேகர நல்லூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கி சென்றார். பின்னர் தனது கிராமத்தினரிடம் போலீஸ் காரரின் நடத்தை குறித்து கூறியுள்ளார்.

    உடனடியாக கிரா மத்தினர் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பஸ்சுக்குள் சென்று போதையில் இருந்த போலீஸ்காரரிடம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர், கிராமத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மஞ்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் காரரை இறக்கிவிட்டு சிறை பிடித்தனர். மேலும் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வர தாமத மானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருச்சுழி- அருப்புக் கோட்டை சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பெரியதம்பியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் சில்மிசம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சுழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியதம்பியை கைது செய்தனர்.

    • காரமடை வாலிபர் கைது
    • உடல்நலகுறைவுடன் வீட்டில் இருந்தவரிடம் பாலியல் அத்துமீறல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை காரமடையை சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 38 வயது வாலிபர், மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வாலிபர் ஓடி விட்டார். இதுகுறித்து மூதாட்டி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • ஓடும் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை
    • திருச்சி பேராசியர் கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.இந்த ெரயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ெரயில் நிலையத்தை வந்தடைந்தது.அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ெரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.உடனே கோட்டை ெரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும்,இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ெரயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ெரயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.

    தேர்வினை கண் காணிக்க தேர்வு மையத் திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியிர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
    • ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில் (வயது57). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரை கண்டிக்கவே முகம்மது இஸ்மாயில் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து முகம்மது இஸ்மாயிலை கைது செய்தனர்.

    • தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார்.
    • மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தட்டிக்கேட்ட ஆசிரியைகளை வாலிபர்கள் தாக்க முயன்றனர்.
    • 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நேற்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தது. மாண வர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

    அப்போது ஆதியூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அளவுக்கு அதிகமான குடிபோதையில் பள்ளியின் அருகே நடந்து சென்றனர். அவர்கள் பள்ளியில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் அருகே சென்றனர்.

    பின்னர் அந்த வாலிபர்கள் ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்டு சிறுமியின் கன்னத்தில் கிள்ளினர். அதில் ஒரு வாலிபர் இது தான் என்னுடைய ஆள் என கூறி சில்மிஷம் செய்தார்.

    இதனை பார்த்த வகுப்பு ஆசிரியை உடனடியாக வெளியே சென்று குடிபோதையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றனர். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 வாலிபர்களும் அங்கு இருந்த தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து வடக்கிப்பா ளையம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியில் தகராறு செய்தது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

    பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார்.
    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி அங்குள்ள புளியமரத்தடியில் உட்கார்ந்து இருந்தபோது கொழப்பலூரை சேர்ந்த பொன்னுசாமி வயது 90 என்ற முதியவர் சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்துவிட்டு சிறுமியின் பெற்றோரிடம் சொல்ல சிறுமியின் தாயார் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மேற்படி முதியவர் பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்
    • கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல்

    கன்னியாகுமரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளச்சல் அருகே உடையார் விளை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இங்கேயே தங்கி படித்த இந்த மாணவி விடுமுறை தினங்களில் ஊருக்கு செல்வது வழக்கம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாணவி ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஊரிலிருந்து மீண்டும் குமரி மாவட்டத்திற்கு பஸ்ஸில் வந்தார். ஊரிலிருந்து பஸ்ஸில் வடசேரிக்கு வந்த போது பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டார்.இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் மாணவி பஸ்சை விட்டு இறங்கி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினார். அந்த வாலிபர் மீண்டும் அதே பஸ்சில் ஏறி மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்தார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் வாலிபர் மாணவியிடம் மீண்டும் சேட்டையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி இது குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    கட்டுப்பாட்டு அறை போலீசார் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இரணியில் போலீசார் இரணியல் கோர்ட் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர்.அப்போது அந்த பஸ் அந்த பகுதிக்கு வந்தது.

    உடனே போலீசார் அந்த பஸ்ஸை நிறுத்தினார்கள். மாணவி போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். உடனே போலீசார் மாணவியின் பின் இருக்கையில் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பெரிய வந்துள்ளது.

    அவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை. தேங்காய்பட்டணம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறா ர்கள். ஒடும் பஸ்சில் மாணவியிடம் வாலிபர் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார்.
    • பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு காலை, மதியம், மாலை நேரங்களில் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில்களில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்களும், கேரளாவில் பணிபுரியும் ஊழியர்களும், பொதுமக்கள் ஏராளமா னோர் பயணம் செய்து வருகிறார்கள். நேற்று மாலையில் பாசஞ்சர் ரெயில் திருவனந்தபுரத் திற்கு செல்வதற்காக பிளாட்பாரம் 1-ஏ-யில் தயாராக நின்றது.

    மகளிர் என ஒதுக்கப் பட்ட பெட்டியில் பெண் வங்கி மேலாளர் ஒருவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அமர்ந்தி ருந்தார். அப்போது ரெயில் பெட்டிக்குள் ஏறிய வாலிபர் ஒருவர் திடீரென அந்த பெண் மேலாளரிடம் சில்மிஷத்தில் ஈடு பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மேலாளர் கூச்ச லிட்டார்.

    அந்த வாலிபரை தள்ளி விட்டு விட்டு ரெயில் பெட்டியை விட்டு கீழே இறங்கி சத்தம் போட்டார். உடனே அங்கிருந்த பொது மக்கள் திரண்டனர்.அதற்குள் அந்த வாலிபர் ரெயில் பெட்டியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அனைத்து பிளாட் பாரங்களிலும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கனகராஜ் சாமுவேல் சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார்.
    • சிறுமியின் தாயார் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரத்தை சேர்ந்தவர் கனகராஜ் சாமுவேல்(வயது 43). இவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தினமும் வந்து பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

    அதனை பயன்படுத்தி சம்பவத்தன்று அங்கு பொருட்கள் வாங்க வந்த சிறுமியை கனகராஜ் சாமுவேல் தொட்டு பேசி உள்ளார். மேலும் சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    உடனே சிறுமியின் தாயார் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கனகராஜ் சாமுவேல் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    ×