search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teasing"

    • காரமடை வாலிபர் கைது
    • உடல்நலகுறைவுடன் வீட்டில் இருந்தவரிடம் பாலியல் அத்துமீறல்

    மேட்டுப்பாளையம்,

    கோவை காரமடையை சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 38 வயது வாலிபர், மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வாலிபர் ஓடி விட்டார். இதுகுறித்து மூதாட்டி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    பொன்னமராவதியில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் உள்ள பாண்டிமான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலீம். இவர் அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.

    இதனையடுத்து அந்த பெண்ணின் தரப்பினர் சலீம் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் பெண்ணை கிண்டல் செய்த சலீம் (33) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் சலீமை தாக்கியதாக வெற்றி செல்வன்(24), பன்னீர்(27) ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    ஆண்டிப்பட்டி அருகே கேலி- கிண்டலை தட்டிக் கேட்ட பெண் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் மணி மனைவி மகாலட்சுமி (வயது36). இவரை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் அடிக்கடி கேலி- கிண்டல் செய்து வந்துள்ளார்

    இதனால் ஆத்திரம் அடைந்த மகாலட்சுமி, அருண்குமாரை தட்டி கேட்டுள்ளார். மேலும் இது குறித்து அருண்குமாரின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை அவரை கண்டித்துள்ளார்.

    மகாலட்சுமி தனது கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அருண்குமார் எதற்கு எனது தந்தையிடம் புகார் கூறினாய் என கேட்டு அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த மணிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

    காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் சிலிமி‌ஷம் செய்த ராணுவவீரர் கைது செய்யபட்டு ஜெயிலில் அடைக்கபட்டார்.
    வேலூர்:

    மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் எஸ்14 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம்பெண் பயணம் செய்தார்.

    ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த சென்னை பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் திடுக்கிட்ட இளம்பெண் அலறி கூச்சலிட்டார். உடனே உஷாரான பயணிகள் வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த துஷ்யந்த் (வயது 24) என்பதும், ராணுவ வீரரான இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்கு செல்வதும் தெரியவந்தது. போலீசார் துஷ்யந்த்தை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ மூக்கை உடையுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மகளிர் வன மையம் மற்றும் இளைஞர், குழந்தைகள் தலைமைத்துவ மையம் ஆகியவற்றின் சார்பில் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி பட்டறை தொடக்க விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார். தற்காப்பு பயிற்சி பட்டறையை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து அது தொடர்பான பிரசுரத்தை வெளியிட்டு பேசினார்.

    திருமணத்துக்கு வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யாராவது வரதட்சணை கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் பிறகு அவர்களாவே வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ள இறங்கி வருவார்கள்.

    திருமணத்தின் போது உங்களது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை பெற்றோர் டெபாசிட் செலுத்தினால் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதனை யாராவது கேட்டால் எடுத்து கொடுக்கக் கூடாது.

    எப்போதும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை சுறு சுறுப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும், எதை பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை துணிச்சலுடன் பேசுங்கள். அச்சத்துடன் இருக்காதீர்கள்.

    பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையை தராது. என்னால் தலைமையேற்க முடியும் என்று கூறி முன்வர வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாக பயணம் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ எட்டி உதையுங்கள், மூக்கை உடையுங்கள், பிறகு அவர்கள் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள்.

    பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அது போல் தைரியமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி பேசினார்.

    பயிற்சி பெற 50 மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கவர்னர் கிரண்பேடி உங்களில் எத்தனை பேரை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான மாணவிகள் கையை உயர்த்தினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி இளைஞர்கள் தொல்லை தருகிறார்கள் என்று நீங்கள் வழியை மாற்றினால், அவர்கள் வேறொரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பார்கள். நீங்கள் மன தையரியத்துடன் செயல்பட்டால் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்யும் பழக்கத்தை விட்டு விடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

    அதன் பின்னர் கேலி செய்யும் இளைஞர்களை எப்படி தாக்குவது என்று கவர்னர் கிரண்பேடி செயல் விளக்கம் அளித்தார். #GovernorKiranBedi

    ×