search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to the woman"

    • தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார்.
    • மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
    • இது குறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.

    பவானி:

    பவானி மேற்கு தெரு 3-வது வீதிைய சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரஸ்வதி. பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் சலீம் (28).

    இந்த நிலையில் சலீம், சரஸ்வதியிடம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இைதயடுத்து சலீம் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை எனவும், சரஸ்வதி, சலீமிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை என சரஸ்வதி புகார் கூறினார்.

    இது குறித்து சரஸ்வதி பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சலீம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்தி ற்காக சலீமை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ேபாலீசார் பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×