search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chilmisham"

    • ஓடும் ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை
    • திருச்சி பேராசியர் கைது செய்யப்பட்டு உள்ளார்

    திருச்சி,

    புதுக்கோட்டை என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேனகா (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கறிஞரான இவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள மாவட்ட நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் கல்வி பயின்று வந்தார்.நேற்று இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். ஏ.சி. கோச்சில் டிக்கெட் எடுத்திருந்தார்.இந்த ெரயில் நேற்று இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.18 மணிக்கு திருச்சி கோட்டை ெரயில் நிலையத்தை வந்தடைந்தது.அதை தொடர்ந்து பயணிகள் அங்கு இறங்கினர்.அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மேனகாவுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருச்சி ெரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.உடனே கோட்டை ெரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் கருப்பண்ணன் கோவில் காடு பகுதியில் சேர்ந்த சந்திர பிரசாத் (வயது 33) என்பதும்,இவர் திருச்சி சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் பணி நிமித்தமாக திருச்சிக்கு வந்துள்ளார்.பின்னர் மேகனா கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் சந்திர பிரசாத்தை திருச்சி ெரயில்வே போலீசார் நள்ளிரவு கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.கைதான சந்திர பிரசாத் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு கல்லூரிக்கு பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அரசு கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ெரயில் நிலையத்தில் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.
    • இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வினோபா நகர் பகுதியில் 48 வயது பெண் வசித்து வருகிறார். இவர் தினமும் இரவு தான் வீட்டில் வளர்க்கும் நாயுடன் அப்பகுதியில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.

    அதுபோல் சம்பவத்தன்று இரவு அந்த பெண் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது சக்தி நகரை சேர்ந்த ரமேஷ் 34 என்ற வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றார்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது திடீரென ரமேஷ் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

    இதனை அந்த பெண் தட்டிக்கேட்ட போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் இது குறித்து அந்த பெண் கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார்.
    • மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார்.
    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆத்திப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 6-வது படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி அங்குள்ள புளியமரத்தடியில் உட்கார்ந்து இருந்தபோது கொழப்பலூரை சேர்ந்த பொன்னுசாமி வயது 90 என்ற முதியவர் சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்துவிட்டு சிறுமியின் பெற்றோரிடம் சொல்ல சிறுமியின் தாயார் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மேற்படி முதியவர் பொன்னுசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×