search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chilmish"

    • போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீசாரை கைது செய்தனர்.
    • போலீசார் வர தாமதமானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் உடையனாம்பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை காவலராக வேலை பார்க்கும் பெரியதம்பி என்பவர் போலீஸ் உடையில் சித்தலக்குண்டு பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.

    அவர் பஸ்சுக்குள் வந்து நின்ற போது குடி போதையில் இருப்பதை பார்த்து பயணிகள் முகம் சுளித்தனர். அப்போது அவர் நின்றிருந்த இடத்தின் அருகிலிருந்த அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளிகாட்டி கொள்ளாமல் குலசேகர நல்லூர் பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கி சென்றார். பின்னர் தனது கிராமத்தினரிடம் போலீஸ் காரரின் நடத்தை குறித்து கூறியுள்ளார்.

    உடனடியாக கிரா மத்தினர் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பஸ்சுக்குள் சென்று போதையில் இருந்த போலீஸ்காரரிடம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் அவர், கிராமத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மஞ்சம்பட்டி பஸ் நிறுத்தத்தில் போலீஸ் காரரை இறக்கிவிட்டு சிறை பிடித்தனர். மேலும் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வர தாமத மானதால் கோப மடைந்ததால் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் திருச்சுழி- அருப்புக் கோட்டை சாலையில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சுழி போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பெரியதம்பியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் சில்மிசம் செய்தது குறித்து பாதிக்கப்பட்ட பெண் திருச்சுழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியதம்பியை கைது செய்தனர்.

    • பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: தட்டிக்கேட்டவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் அவதூறாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இது உறவினர்களுக்கு தெரியவரவே,அதை கந்தனிடம் நல்லதம்பி (29), சோமையாபுரம் சாந்தகுமார் (31) ஆகியோர் மாணவியிடம் பேசவேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 4 பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் தாக்கினர்.

    இதில் நல்லதம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனை தடுக்கச் சென்ற சாந்தகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினர். காயமடைந்த நல்லதம்பி, சாந்தகுமார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கந்தன்,சாமிபிள்ளை மகன் பாண்டியராஜன், கருப்பசாமி, ராஜபாண்டி மகன் ராஜலிங்கம் ஆகியோரை தேடிவருகின்றனர்.

    ×