search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான வாலிபர்"

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

    நெகமம்,

    கோவை மாவட்டம் பெரியநெகமம் திருமூர்த்தி செட்டியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது40). லேத் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும், நீலேஷ் ராமசாமி(13) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இதே போன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அபிநயா கோபித்து கொண்டு மகனுடன், கேரளமாநிலம் வண்ணாமடையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து கார்த்திகேயன் மட்டும் தனியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ அழைப்பதற்காக அவர் கேரளாவுக்கு சென்றார்.

    அங்கு தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், கார்த்திகேயனின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பி விட்டனர்.அங்கிருந்து வந்த கார்த்திகேயன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார்.

    அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதனை உறவினர்கள் எடுத்து பார்த்தனர். அப்போது தான் தற்கொலை செய்ய போகிறேன். தன்னை தேட வேண்டாம் எழுதி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திகேயனின் உறவினர் இது தொடர்பாக நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்.
    • அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சதீஷ்குமார் காதலியுடன் பிடிபட்டார். அவர்கள் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ×