search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான வாலிபர்
    X

    கோவையில் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான வாலிபர்

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

    நெகமம்,

    கோவை மாவட்டம் பெரியநெகமம் திருமூர்த்தி செட்டியார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது40). லேத் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி அபிநயா என்ற மனைவியும், நீலேஷ் ராமசாமி(13) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பும் இதே போன்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அபிநயா கோபித்து கொண்டு மகனுடன், கேரளமாநிலம் வண்ணாமடையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து கார்த்திகேயன் மட்டும் தனியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ அழைப்பதற்காக அவர் கேரளாவுக்கு சென்றார்.

    அங்கு தனது மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், கார்த்திகேயனின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பி விட்டனர்.அங்கிருந்து வந்த கார்த்திகேயன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார்.

    அவரை உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதனை உறவினர்கள் எடுத்து பார்த்தனர். அப்போது தான் தற்கொலை செய்ய போகிறேன். தன்னை தேட வேண்டாம் எழுதி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திகேயனின் உறவினர் இது தொடர்பாக நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×