என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relatives"

    களக்காட்டில் கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43), சமையல் தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக முருகன் மீது எதிர் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் சில வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் நடமாட்டம் பற்றிய காட்சிகள் எதுவும் இல்லை. சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை தெரிந்து அதில் தங்களது உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் மர்ம நபர்கள் வயல் வெளிகள் வழியாக வந்து பதுங்கி இருந்திருக்கலாம் எனவும், முருகன் சம்பவ இடத்துக்கு வரும் போது அவரை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசா ரணையை முடுக்கவிட்டுள்ளனர்.

    இதற்கிடையே முருகனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று 4 வாகனங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் கூறியதாவது:- கூலிப்படைைய ஏவி முருகன் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    கொலை நடந்து இன்றோடு 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை முருகன் உடலை வாங்க மாட்டோம்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்ப கவுண்டம்பாளையத்தில் வசிக்கும் கார்த்திகேயன்- கலைவாணி தம்பதியினருக்கு தர்சனா (வயது 10) என்ற மகள் உள்ளார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கார்த்திகேயன் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி அன்று காரில் சென்றபோது பெரம்பலூர் அருகே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தர்சனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கார்த்திகேயன் குடும்பத்தார், நீண்ட தொலைவு சென்று வருவதற்கு சிரமமாக இருந்ததால், கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று முன் தினம் பெரம்பலூரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பெரம்பலூர் சென்று ஆவணங்களை கொண்டு வந்து நேற்று மாலை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் வேலை நேரம் முடிந்து விட்டது.

     மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி சிறுமியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இன்று விரைவாக பரிசோதனை முடித்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

    இதையடுத்து சமாதானம் அடைந்த சிறுமியின் பெற்றோர் ,உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    • இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பச்சகோபன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி மாலதி (வயது28). இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று காலை வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மாலதி உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.அவர்களுடன் உறவி னர்கள் வாக்குவாதம் செய்து கட்டாய பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மாலதி உடலை கைப்பற்றி ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆட்டோவில் ஏற்றபட்ட மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • ஒருசில வார்டுகளில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர உள் நோயாளியாகவும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கால தாமதம்

    இங்கு ஒருசில வார்டு களில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    மாறாக அதே படுக்கையில் நீண்டநேரம் இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிறது. அதனை உடனடியாக வேறு தனி அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கோரிக்கை

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்கத்தின் தலைவர் முகமது அயூப், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இறந்தவர் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பணியாளர்கள் தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை

    குறிப்பிட்ட வார்டில் ஒரு நபர் இறந்து விட்டால் உடனடியாக வேறு ஒரு தனி அறைக்கு மாற்ற வேண்டும். அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கால தாமதப்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பொதுஜன நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, கருங்காலிவிளையை சேர்ந்தவர் சின்னநாடார். இவரது மகன் சுதன் (வயது 27). இவர் கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    சுதன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சபரி மலைக்கு சென்றுவிட்டு கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று சுதன் வி‌ஷம் குடித்தார்.

    தான் வி‌ஷம் குடித்த தகவலை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் மூலமாக கூறினார். தன்னை காப்பாற்றுமாறு கூறி சுதன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சுதனை தேடினார்கள்.

    அப்போது முட்டம் செங்குழி பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் சுதன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுதன் கொண்டுவரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் அருகே தெருவுக் கடை பகுதியை சேர்ந்தவர் காட்வின் (27). வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இறந்த ரவுடியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவுடி மரணம் தொடர்பாக 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). ரவுடியான இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 13-ந் தேதி இரவு எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கார்த்திக், அவரது கூட்டாளிகள் 3 பேர் கத்தியுடன் சுற்றி வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் நேற்று முன்தினம் கார்த்திக்கிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து கார்த்திக்கின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் விசாரணைக்கு பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உறவினர்களிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு அரவிந்தன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் கார்த்திக்கின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கார்த்திக் மரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, மேற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர்கள் சாய்சரண் தேஜஸ்வி, ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் அழகேசன், ஹரிகுமார், விஜய் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திக் மரணம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் போலீஸ்காரர் ஷியாம்சுந்தர் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்ற துணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர். #RowdyDeath
    பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மரணம் அடைந்த சிவகிரி கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவி பட்டினத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனை ஜாமீனில் எடுக்க அவருடைய உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்று நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், இறந்த கைதி கணேசனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் பாளை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசனின் உறவினர்கள், அவரது உடலை பெற்று சென்றனர். ஆனாலும் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தக்கலையில் காதலனுடன் சுற்றி திரிந்த பிளஸ் 1 மாணவியை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் தன் மகள் காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். 

    இந்தநிலையில் நேற்று அந்த மாணவி, அவரது தாயாருக்கு செல்போனில் பேசினார். அப்போது தனது காதலனுடன் தான் சென்றதாக தெரிவித்தார். தாயார் தொடர்ந்து அவரிடம் கனிவாக பேசியதில் அவர் வீடு திரும்ப சம்மதித்தார். அதன்படி தக்கலை ஆஸ்பத்திரி அருகே வருவதாக மாணவி தெரிவித்தார். 

    உடனே மாணவியின் உறவினர்களும், போலீசாரும் அங்கு காத்திருந்தனர். மாணவி தனது காதலருடன் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார். அவரை உறவினர்களும், போலீசாரும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். 
    அவரும், மாணவியும் மைனர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
    காதல் திருமணம் செய்து கொண்டு காரில் வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தெசவிளக்கு பள்ளிக் கொண்டான்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 26). இவர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி(20). இவர் வனவாசி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரபு வேலை செய்யும் பகுதி வழியாக தினமும் கல்லூரி பேருந்து செல்வது வழக்கம். கலைச்செல்வி கடந்த இரண்டு வருடங்களாக பிரபுவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுவின் செல்போன் என்னுக்கு கலைச்செல்வி யார் என கூறாமல் வாட்ஸ் ஆப் மூலம் தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வி தனது காதலை வெளிப்படையாக கூற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு வருமாறு பிரபுவை அழைத்தார். அவரும் அங்கு சென்று தனது காதலியை முதன் முதலாக பார்த்து, இருவரும் காதலை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். நான் உங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும். நான் அதே பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறினார்.

    இதை தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்தனர். இவர்களின் காதல் கலைச் செல்வியின் வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து கலைச் செல்விக்கு திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இது குறித்து கலைச்செல்வி காதலன் பிரபுவுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபுவிடம் கூறினார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    இதை அறிந்த கலைச்செல்வியின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் செய்தனர். போலீசார் பிரபுவின் செல்போன் எண்ணுக்கு அழைத்து காவல் நிலையம் வருமாறு கூறியுள்ளனர்.

    இதையடுத்து திருமணம் செய்து கொண்ட காதலர்கள் கார் மூலம் தாரமங்கலம் காவல் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓமலூர் அருகே சிக்கம்பட்டி என்ற இடத்தில் கார் சென்ற போது மற்றொரு காரில் எதிர்திசையில் இருந்து வந்த கலைச்செல்வியின் உறவினர்கள் காரை வழி மறித்து காதலன் பிரபுவை தாக்கி விட்டு, காதலி கலைச்செல்வியை கடத்தி சென்றனர். இதில் காயமடைந்த பிரபு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்டு வரும் போது காரை வழி மறித்து காதலனை தாக்கி காதலியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 22), செல்போன் கடை ஊழியர்.

    இவருக்கும் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இதுகுறித்து மதுரை விடியல் ஹோம் குழந்தைகள் காப்பக அலுவலர் மாரீசுவரிக்கு தகவல் கிடைத்தது. அவர் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமர், சிறுமியின் உறவினர்கள் ரெங்கசாமி, எல்லம்மாள், சரவணன், வித்யா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×