search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives"

    • 2-வது திருமணம் செய்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சூலப்பட்டி நாச்சி யார்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமி யாபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (27). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர் களுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது. திரு மணத்தின்போது மாப் பிள்ளை வீட்டாருக்கு 10 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் மேலும் பணம் கொடுக்குமாறு கவுசல்யாவை கண்ணன் வீட்டார் வற்புறுத்தி யுள்ளனர். அதன் பேரில் கவுசல்யா வீட்டினர் ரூ.50 ஆயிரம் கொடுத்து ள்ளனர். அதன்பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு வந்துள்ளனர்.

    பணம் கொடுக்கா விட்டால் சேர்ந்து வாழ முடியாது என கண்ணன் வீட்டார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த கவுசல்யா, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொல்வீரன் பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை கண்ணன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுசல்யா வுக்கு தெரியவந்தது. இதைதொ டர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் கண்ணன் குடும்பத்தின் மீது கவுசல்யா வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் கண்ணன், அவரது தாயார் சுப்புதாய், சகோதரர் பன்னீர் செல்வம், சகோதரி சுந்தரம்மாள், சகோதரர் மனைவி பானுமதி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்த், இவரது மகள் (வயது 19).

    இவருக்கும் மயிலாடுது றையைச் சார்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர் 20 என்ற வாலிபருக்கும் சில ஆண்டு களாக காதல் ஏற்பட்டது.

    காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.

    தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்து றையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் காவல்து றையினர் மறுத்து விட்டனர்.

    பின்னர் பெண்ணை காதல் திருமணம் செய்த கணவனுடன் போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர்.

    ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலிஸ்சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தங்கச்சாமி(வயது 26). மாடசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    திடீர் சாவு

    தங்கச்சாமி அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 11-ந்தேதி புளியங்குடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அறிந்த அவரது உறவினர்கள், தங்கச்சாமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புளியங்குடியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், தென்காசி ஆர்.டி.ஓ. கங்காதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர், புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயாருக்கு முதியோர் உதவி த்தொகை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை ஆர்.டி.ஓ. மேற்கொண்டார். மேலும் தங்கச்சாமியின் குடும்பத்தி னருக்கு அரசு நிவாரண தொகை கிடைக்க செய்வதாக உறுதி அளித்தார். இதனால் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் தங்கச்சாமி உடலை பெற்றுக்கொள்ளவும் சம்மதித்தனர்.

    இதற்கிடையே இன்று காலை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள தங்கச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
    • 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் கடந்தும் இதுவரை கொலை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    என உறவினர்கள் குடும்பத்தினர் ஊர் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

    கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் மயிலாடுதுறை - சீர்காழி நெடுஞ்சாலை தென்பாதி மெயின் ரோட்டில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஏ.டி.எஸ்.பி தலைமை யில் ஏராளமான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் குற்றவாளிகளை விரைவில் காவல்துறை கைது செய்யும் என்று தெரிவி த்ததன் அடிப்படையில் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார். தெரிவிக்கின்றனர்.

    • இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பச்சகோபன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி மாலதி (வயது28). இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று காலை வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மாலதி உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.அவர்களுடன் உறவி னர்கள் வாக்குவாதம் செய்து கட்டாய பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மாலதி உடலை கைப்பற்றி ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆட்டோவில் ஏற்றபட்ட மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • ஒருசில வார்டுகளில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர உள் நோயாளியாகவும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கால தாமதம்

    இங்கு ஒருசில வார்டு களில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    மாறாக அதே படுக்கையில் நீண்டநேரம் இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிறது. அதனை உடனடியாக வேறு தனி அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கோரிக்கை

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்கத்தின் தலைவர் முகமது அயூப், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இறந்தவர் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பணியாளர்கள் தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை

    குறிப்பிட்ட வார்டில் ஒரு நபர் இறந்து விட்டால் உடனடியாக வேறு ஒரு தனி அறைக்கு மாற்ற வேண்டும். அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கால தாமதப்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பொதுஜன நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

    • ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்ப கவுண்டம்பாளையத்தில் வசிக்கும் கார்த்திகேயன்- கலைவாணி தம்பதியினருக்கு தர்சனா (வயது 10) என்ற மகள் உள்ளார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கார்த்திகேயன் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி அன்று காரில் சென்றபோது பெரம்பலூர் அருகே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தர்சனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கார்த்திகேயன் குடும்பத்தார், நீண்ட தொலைவு சென்று வருவதற்கு சிரமமாக இருந்ததால், கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று முன் தினம் பெரம்பலூரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பல்லடம் நோக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் பல்லடம் அருகே வரும்பொழுது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பெரம்பலூர் சென்று ஆவணங்களை கொண்டு வந்து நேற்று மாலை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் வேலை நேரம் முடிந்து விட்டது.

     மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை . இன்று காலை தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி சிறுமியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இன்று விரைவாக பரிசோதனை முடித்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

    இதையடுத்து சமாதானம் அடைந்த சிறுமியின் பெற்றோர் ,உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    களக்காட்டில் கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43), சமையல் தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக முருகன் மீது எதிர் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் சில வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் நடமாட்டம் பற்றிய காட்சிகள் எதுவும் இல்லை. சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை தெரிந்து அதில் தங்களது உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் மர்ம நபர்கள் வயல் வெளிகள் வழியாக வந்து பதுங்கி இருந்திருக்கலாம் எனவும், முருகன் சம்பவ இடத்துக்கு வரும் போது அவரை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசா ரணையை முடுக்கவிட்டுள்ளனர்.

    இதற்கிடையே முருகனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று 4 வாகனங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் கூறியதாவது:- கூலிப்படைைய ஏவி முருகன் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    கொலை நடந்து இன்றோடு 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை முருகன் உடலை வாங்க மாட்டோம்.
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, கருங்காலிவிளையை சேர்ந்தவர் சின்னநாடார். இவரது மகன் சுதன் (வயது 27). இவர் கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    சுதன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சபரி மலைக்கு சென்றுவிட்டு கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று சுதன் வி‌ஷம் குடித்தார்.

    தான் வி‌ஷம் குடித்த தகவலை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் மூலமாக கூறினார். தன்னை காப்பாற்றுமாறு கூறி சுதன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சுதனை தேடினார்கள்.

    அப்போது முட்டம் செங்குழி பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் சுதன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுதன் கொண்டுவரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் அருகே தெருவுக் கடை பகுதியை சேர்ந்தவர் காட்வின் (27). வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இறந்த ரவுடியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவுடி மரணம் தொடர்பாக 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். #RowdyDeath
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). ரவுடியான இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 13-ந் தேதி இரவு எம்.கே.பி. நகர் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கார்த்திக், அவரது கூட்டாளிகள் 3 பேர் கத்தியுடன் சுற்றி வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் நேற்று முன்தினம் கார்த்திக்கிடம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து கார்த்திக்கின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ்குமார் விசாரணைக்கு பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார், கார்த்திக் உறவினர்களிடம் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு அரவிந்தன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் கார்த்திக்கின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கார்த்திக் மரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி, மேற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர்கள் சாய்சரண் தேஜஸ்வி, ஈஸ்வரன், உதவி கமிஷனர்கள் அழகேசன், ஹரிகுமார், விஜய் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கார்த்திக் மரணம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் போலீஸ்காரர் ஷியாம்சுந்தர் ஆகியோரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்ற துணை கமிஷனர்கள் உத்தரவிட்டனர். #RowdyDeath
    ×