search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bricklayer death"

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55). இவர் நேற்று கும்பகோணத்திலுள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கம்பி இறக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்

    மணவாளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்ததை உறவினர்களுக்கு போனில் தெரிவித்த கொத்தனார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, கருங்காலிவிளையை சேர்ந்தவர் சின்னநாடார். இவரது மகன் சுதன் (வயது 27). இவர் கேரளாவில் கட்டிட வேலை செய்து வந்தார்.

    சுதன் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். சபரி மலைக்கு சென்றுவிட்டு கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று சுதன் வி‌ஷம் குடித்தார்.

    தான் வி‌ஷம் குடித்த தகவலை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் மூலமாக கூறினார். தன்னை காப்பாற்றுமாறு கூறி சுதன் கதறி அழுதார். இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் சுதனை தேடினார்கள்.

    அப்போது முட்டம் செங்குழி பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் சுதன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுதன் கொண்டுவரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சுதன் பரிதாபமாக இறந்தார்.

    இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் அருகே தெருவுக் கடை பகுதியை சேர்ந்தவர் காட்வின் (27). வி‌ஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காட்வின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம் அருகே லாரியில் ஏற்றிய போது மின் கம்பியில் இரும்பு குழாய் உரசி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பண்ருட்டி அக்ரவல்லியை சேர்ந்த கொத்தனார்கள் விமலக்கண்ணன் (வயது 25). ஸ்ரீனிவாசன் ஆகியோர் புதுவையில் தங்கி இருந்து கட்டுமான பணி வேலை பார்த்து வந்தனர்.

    அரியாங்குப்பம் மண வெளி கட்டபொம்மன் நகரில் வீடு கட்டுமான பணி நடந்தது. இங்கு அவர்கள் பணியாற்றினார்கள். மேல் மாடி கட்டுமான பணிக்கு பயன்படுத்திய இரும்பு குழாய்களை அகற்றி அவற்றை இருவரும் லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

    ஸ்ரீனிவாசன் மேல் மாடியில் இருந்து இரும்பு குழாய்களை எடுத்து கொடுக்க, கீழே நின்ற விமலக்கண்ணன் அவற்றை ஒவ்வொன்றாக வாங்கி லாரியில் ஏற்றினார்.

    அந்த இடத்துக்கு மேலே மின்கம்பி சென்றது. விமலக் கண்ணன் இறக்கிய இரும்பு குழாய் ஒன்று அந்த மின் கம்பி மீது திடீரென உரசி விட்டது. இதில் அவர் உடல் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது தொடர்பாக அரியாங்குப்பம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews

    ×