search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணம் செய்த 16 வயது சிறுமி மீட்பு: கணவர்-உறவினர்கள் மீது வழக்கு
    X

    குழந்தை திருமணம் செய்த 16 வயது சிறுமி மீட்பு: கணவர்-உறவினர்கள் மீது வழக்கு

    குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட 16 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 22), செல்போன் கடை ஊழியர்.

    இவருக்கும் தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இதுகுறித்து மதுரை விடியல் ஹோம் குழந்தைகள் காப்பக அலுவலர் மாரீசுவரிக்கு தகவல் கிடைத்தது. அவர் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ராமர், சிறுமியின் உறவினர்கள் ரெங்கசாமி, எல்லம்மாள், சரவணன், வித்யா மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×