search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man body"

    • பயணிகள் நிழற்குடை அருகே முதியவர் உடல் கிடந்தது
    • உடலை மீட்டு போலீசார் விசாரணை

    கரூர்:

    கடவூர் தாலுகா தரகம்பட்டி முனியப்பன் கோயில் பயணிகள் நிழற்குடை அருகே அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து, கிராம நிர்வாக அலுவலர் நர்மதாவுக்கு தகவல் கொடுத்தனர். தகவலை உறுதி செய்து கொண்ட அவர், சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
    • இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள நாட்ராயன்கோவில் என்ற இடத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் பிணம் கிடப்பதாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தன்னார்வ அமைப்பினர். உடலை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் தெரியப்படுத்தினர். தகவல் அறிந்த முதியவரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து போன முதியவர் மூலனூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சென்னி (வயது 65) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து நாட்ராயன் கோவில் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்துள்ளார். முதியவரின் பிணத்தை தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    ×