search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"

    • விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
    • தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் 2024 திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்கிறேன்.

    விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்.

    தமிழ்நாட்டின் 2வது சர்வதேச மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இத்துட் ஹோடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,

    "தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எண்ணற்ற விளையாட்டு வீரர்- வீராங்கனையரைக் கொண்ட கோவையில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அனைத்து வகையிலும் முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் செயல்படும்.

    சர்வதேச கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்னும் கோவை மக்களின் கனவை நனவாக்குவோம்" என்று பதிவிட்டுள்ளார். 

    • இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்.

    கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்.

    இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    முரசொலியையும், உதயசூரியனையும் பிரிக்க முடியாது. மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும்.

    5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வையுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
    • எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.

    உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.

    பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.

    மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.

    • 10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
    • எல்லாம் தேர்தல் தோல்வி பயம்

    ஜெயங்கொண்டம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் போது பிரதமர் உங்களை சந்தித்தாரா தொலைக்காட்சியில் அவ்வப்போது பேசுவார் அவ்வளவுதான்.

    அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள் வேலை வெட்டிக்கு செல்லாதீர்கள் வியாபாரமோ விவசாயமோ பண்ண வேண்டாம் என்று கூறினார்.

    வெளியே வந்து விளக்கேற்றுங்கள். கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறி மக்களை ஏமாற்றினார்.


    ஆனால் நமது முதல்வர் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை உயிரை பணயம் வைத்து கவச உடைய அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க செய்தார்.

    10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம். நான் சவால் விடுகிறேன் 10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது டெபாசிட் இழப்பார்கள்.

    நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
    • ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பொன்னேரியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உச்சி வெயிலை விட உக்கிரமான ஒன்றிய அரசை விரட்டியே ஆக வேண்டும் என்று இவ்வளவு எழுச்சியோடு கூடி இருக்கிறீர்களே... அதற்கு முதலில் நன்றி. கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் நான் இதே இடத்தில் பிரசாரத்தை மேற்கொண்டேன். அப்போது இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தீர்கள். ஆனால் இந்த முறை 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் போதாது.

    கடந்த முறை நமது எதிரிகள் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இன்று எல்லோரும் பிரிந்து நிற்கிறார்கள். எனவே குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன். குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால் மாதம் 2 நாள் நான் இங்கு வந்து திருவள்ளூர் தொகுதியில் தங்கி உங்களுடைய தொகுதியின் அனைத்து தேவைகளையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவேன். நீங்கள் இதை செய்தால் எனது வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். நீங்கள் எங்கள் வேட்பாளருக்கு போடும் வாக்கு, பிரதமர் மோடியின் தலையில் வைக்கும் வேட்டு.


    தலைவர் கலைஞர் ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் அறிக் கையை வெளியிட்டு சொல்வார். சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்று செய்து காட்டினார். அவரது வழியில் வந்த முதல்-அமைச்சரும் சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். பொன்னேரி அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் முதல் தரமான மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும். அனைத்து குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி விரிவுபடுத்தப்படும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இந்த தொகுதியை சுற்றி உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்து தருவோம். மாதவரம் அல்லது விம்கோ நகரில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை மீஞ்சூர் வரை நீட்டிக்கப்படும். பாரம்பரிய மீனவ சமுகதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படு வார்கள். மீனவர்கள் நலன் காக்க தேசிய மீனவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

    இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மாயமாவதை தடுக்க தடையற்ற தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் உங்களுக்கு கொடுத்து உள்ளார்.

    மகளிருக்கு கட்டண மில்லா பஸ் வசதி திட்டத்தை முதல்-அமைச்சர் கொடுத்தார். இங்கு வந்திருக்கும் மகளிரும் இதை பயன்படுத்துகிறீர்கள் தானே. இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் நிற பஸ்தான். இன்னும் சொல்லப்போனால் நாம், பெண்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

    அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அதை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பெண்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இப்போது அவர்கள் தான் பஸ் உரிமையாளர்கள். எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். இந்த 3 வருடத்தில் 460 கோடி பயணங்களை மேற் கொண்டு இருக்கிறார்கள். இதை நகைச்சுவையாக சொல்லவில்லை. இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. இதுதான் திராவிட மாடல் அரசு. இப்போது பிங்க் பஸ்சை தாய்மார்கள் ஸ்டாலின் பஸ் என்று தான் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி யாரைப்பார்த்தாலும் முட்டி போட்டு விடுகிறார். பிரதமர் மோடியை பார்த்தால் படுத்து விடுகிறார். மனிதருக்கு முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கத்தான் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் முதுகெலும்பு இல்லாத ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான். மோடி பிரதமராக வரக்கூடாது என்று எங்களால் கூற முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுவாரா? ஐபிஎல் விளையாட்டும் அ.தி.மு.க.வும் ஒன்று. அ.தி.மு.க.விலும் அத்தனை அணிகள் உள்ளன.

    பிரதமர் மோடியின் பெயரை 29 காசு என்று மாற்றிவிட்டேன். ஏனென்றால், நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் வெறும் 29 காசு தான் தருகிறார். இனி யாரும் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்லாதீர்கள். இனி அவரது பெயர் 29 காசு. இன்னும் ஒரு மாதம் தான் அவர் பிரதமர். அதன் பிறகு அவர் பிரதமர் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

    தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளிலும் 1,403 பேர், 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. வேட்புமனு பரிசீலனையின் போது பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு அரசியல் கட்சியினர் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    வேட்புமனுவை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளையே வெளியிடப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து தினமும் அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அருகே தடங்கம் பி.எம்.பி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதேபோல் அனைத்து கட்சி தலைவர்களுமே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் முற்றுகையிட்டு போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந்தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டல் ஹைவே இன் அருகில் அவர் பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பல்லாவரம் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலை, அன்னை தெரேசா பள்ளி அருகில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் 11.30 மணிக்கு ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்று மாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு ஆலந்தூர் கோர்ட்டு அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு பல்லாவரம் சந்தை ரோடு பகுதியிலும், மாலை 6.30 மணிக்கு தாம்பரம், சண்முகம் சாலை, காந்தி மார்க்கெட் பகுதியிலும், இரவு 7.30 மணிக்கு மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகில் அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் காலை 11 மணியளவில் சென்னை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இன்று பிற்பகல் 3 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தேரடி சந்திப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில் அவர் ஓட்டு சேகரிக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இரவு 8 மணிக்கு வேளச்சேரி திருவள்ளுவர் நகரில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 8 மணி முதல் அவர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தலைவர்கள் பலர் முற்றுகையிட்டுள்ளதால் தேர்தல் பிரசாரம், வேகம் எடுத்துள்ளது.

    • அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.
    • வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகம், புதுவையில் வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளதால் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 31-ந்தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    அன்றைய தினம் காலையில் சிதம்பரம், கடலூரில் பிரசாரம் செய்யும் உதயநிதி, மாலை 4.30 மணிக்கு புதுவைக்கு வருகிறார்.

    வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு மரப்பாலம் சந்திப்பிலும், 6.30 மணிக்கு அண்ணா சதுக்கத்திலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
    • அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார்.

    அரக்கோணம்:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்தார்.

    முன்னதாக கட்சியினர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீரவாள் வழங்கினர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வெள்ளி வீரவாளை அசைத்துக்காட்ட அங்கிருந்த தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கினார்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் பிரசார வாகனத்தில் அமைச்சர் காந்தி ஏற முற்பட்டார்.

    இதனால் பேச்சை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர் வாகன த்தில் ஏறி நிற்கும் வரை காத்திருந்தார்.

    தொடர்ந்து அமைச்சர் காந்தி வாகனத்தில் ஏறி நிற்க கூடியிருந்த ஒரு பகுதியினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்பொழுது அங்கு கூடி இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் நான் பேசத் தேவையில்லை இல்லையா? அமைச்சரை பார்த்து விட்டீர்கள் அல்லவா, நான் கிளம்பட்டுமா, என்று கேட்டு ஷாக் கொடுத்தார். அங்கு கூடி இருந்த பெண்கள் உட்பட அனைவரும் வேண்டாம் நீங்கள் பேசுங்கள் என கூறினர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தன் பேச்சை தொடர்ந்தார்.

    இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

    • திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    திருவண்ணாமலையில் ரூ. 38 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 56 கோடி ரூபாய் செலவில் சாத்தனூர் அணையில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் தினமும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும். திருவண்ணாமலை-திருப்பத்தூருக்கு ரெயில் சேவை வழங்கப்படும்.

    புதியதாக அமைய உள்ள சுங்கச்சாவடி ரத்து செய்யப்படும். கடந்த 2014-ம் ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 450 ரூபாயாக இருந்தது. இன்று சிலிண்டர் விலை 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    தற்போது 100 ரூபாய் குறைப்பு என்ற நாடகத்தை மோடி அரசு நடத்தி உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் மீது 500 ரூபாய் விலையை ஏற்றி விடுவார்.

    அவர்களின் நாடகத்தை மக்கள் நம்பாதீர்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 75 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசலும் வழங்கப்படும்.

    ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள், ஜூன் 4-ந் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்.

    கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக 40-க்கு 40 என்ற மகத்தான வெற்றி இலக்கை அடைய அனைவரும் அயராது உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?
    • மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொளுத்தும் வெயிலிலும் என்ன காண வந்துள்ள தாய்மார்களாகிய நீங்கள் நினைத்தால் வெற்றி நிச்சயம்.

    * தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்?

    * 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    * மாதம் இருமுறை தேனியில் தங்கி உங்களது கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன்.

    தொடர்ந்து 3 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    • மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது.
    • தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்க ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதா, நிச்சயம் செய்வீர்களா?

    இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை.

    இந்த 5 வருஷத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டி இருக்கிறோம். மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஒவ்வொருவருக்கும் வெறும் 28 பைசா தரும் பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்

    மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது. ஆனால் பிரதமர் வர வில்லை. நான் உங்க அப்பன் வீட்டு காசையா கேக்குறேன் என கேட்டேன், நிர்மலா சீதாராமன் என்னை கூப்பிட்டு மிரட்டினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    மத்திய பா.ஜ.க. அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐ.பி.எல். அணிகளை போல அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது. நமது இந்தியாவை காப்பாற்ற வேண்டும். தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதையடுத்து அவர் திருமங்கலத்தில் பிரசாரத்தின் போது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காததை சுட்டிக்காட்டி கையில் மீண்டும் செங்கல்லை தூக்கி காண்பித்து பேசினார்.

    • தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும்.
    • உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, டாக்டர் பொன் கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., விழுப்புரம் எம்.எல் .ஏ. டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    தி.மு.க.வை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு பெற வேண்டும். 10 ஆண்டுகளில் பா.ஜனதா எதையும் செய்யாத நிலையில் 3 ஆண்டுகளில் சொன்னதை செய்த முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர மோடி நினைத்து செயல்பட்டு வருகிறார்.

    உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தபோதே சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினராக அறிவித்துவிட்டார். அதன் பிறகும் கவர்னர் பதவி பிரமாணம் செய்யவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதி பதவிபிரமாணம் செய்யவில்லை என்றால் கவர்னர் மீது நடவடிக்கை எடுப்பேன் என கூறியதை தொடர்ந்து தான் எனக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமலாக்கதுறையை கையில் வைத்துக்கொண்டு முதலமைச்சரையே கைது செய்துள்ளவர்கள் தான் பா.ஜனதா அரசு. அமலாக்க துறையை அனுப்பி தான் பா.ஜ.க.விற்கு 2500 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொன்முடி பேசினார்.

    ×