search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

    • மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது.
    • தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்க ஜெயிக்க வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, உங்களுக்கு இருக்கிறதா, நிச்சயம் செய்வீர்களா?

    இந்த தேர்தல் மூலம் மாநில உரிமைகளை மீட்க வேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையையும் மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமைகள் அடகு வைத்து விட்டார்கள். மத்திய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை.

    இந்த 5 வருஷத்தில் வரியாக 6.30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கட்டி இருக்கிறோம். மத்திய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு நமக்கு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஒவ்வொருவருக்கும் வெறும் 28 பைசா தரும் பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும்

    மழை வெள்ளத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது. ஆனால் பிரதமர் வர வில்லை. நான் உங்க அப்பன் வீட்டு காசையா கேக்குறேன் என கேட்டேன், நிர்மலா சீதாராமன் என்னை கூப்பிட்டு மிரட்டினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

    மத்திய பா.ஜ.க. அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐ.பி.எல். அணிகளை போல அ.தி.மு.க.வில் எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது. நமது இந்தியாவை காப்பாற்ற வேண்டும். தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இதையடுத்து அவர் திருமங்கலத்தில் பிரசாரத்தின் போது எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காததை சுட்டிக்காட்டி கையில் மீண்டும் செங்கல்லை தூக்கி காண்பித்து பேசினார்.

    Next Story
    ×