search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • ரேண்டம் அடிப்படையில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
    • அனைத்து விவிபாட் ரசீதுகளும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

    வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும்.

    தேவைப்பட்டால் இந்த ரீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

    ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி 3500 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ்.
    • தேர்தல் களத்தில் சமநிலையை பாதிக்கும் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்தது.

    வருமான வரி தாக்குதலில் தவறு செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராதம், வட்டி என சுமார் 3500 கோடி ரூபாய் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரி தீர்ப்பாயம் காங்கிரஸ் கட்சியின் சில வங்கி கணக்குகளை முடக்கியது.

    இதனால் தேர்தல் நேரத்தின்போது தங்களால் பணம் எடுக்க சிரமமாக உள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் எந்த தடையும் பிறப்பிக்கவில்லை.

    இதனால் உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது இது வரி தீவிரவாதம். மக்களவை தேர்தலின்போது பணத்தை எடுக்க முடியாத வகையில் முடக்குவதற்கான முயற்சி என குற்றம்சாட்டியது. இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும் எனவும் தெரிவித்தது.

    இந்த வழக்கு பிவி நாகரத்னா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மத்திய சொலிட்டர் ஜெனரல், தேர்தல் முடியும் வரை கட்டாய நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவித்தார்.

    2024-ல் 20 சதவீதம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. 135 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. 1,700 கோடி ரூபாய் கட்டுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதன்பின் 1,700 கோடி ரூபாய் கட்ட வலியுறுத்தப்படும். ஒட்டுமொத்த விசயங்களும் தேர்தலுக்கு பின் சரி செய்யப்படும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்" என்றார்.

    மத்திய அரசு வரி கட்டுவதற்கு ஏதேனும் இடைக்கால தடைவிதிக்கிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, "அப்படி ஏதும் இல்லை. தேர்தல் வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்" என்றார்.

    • தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் நிதி வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
    • ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும்.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்வதற்கு 3 நாட்கள் முன்பு, மேலும் ₹10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட பொதுத்துறை நிறுவனமான இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளிவந்துள்ளது.

    தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட ஒன்றிய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்ற தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் அம்பலமாகியுள்ளது

    10000 கோடி மதிப்பிலான தேர்தல் பாத்திரங்களை அச்சிடும் பணியை நிறுத்துமாறு நிதி அமைச்சகம் கடந்த மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டது.

    தேர்தல் பத்திரங்களை தடை செய்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு 2 வாரங்களுக்கு பின்னர், எஸ்பிஐ நிதி அமைச்சகத்திடம் அச்சிடும் பணியை நிறுத்தி வைக்குமாறு கூறிய பின்பு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகம் தலா ₹1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களில் ஏற்கனவே 8,350 தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐக்கு தயாரித்து அனுப்பியுள்ளது. ஆகவே மீதமுள்ள 1,650 தேர்தல் பத்திரங்கள் அச்சிடுவது மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தனிநபர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி என அரசியல் கட்சிகளுக்குப் பத்திரங்களை வழங்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அரசியல் கட்சியால் 15 நாட்களுக்குள் பத்திரங்களில் இருந்து பணத்தை பெற முடியும். ஆனால், யார் எந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவல் இதில், மறைமுகமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் தான் எஸ்.பி.ஐ. தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது
    • தேர்தல் பத்திரங்களின் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வழங்கவேண்டும்

    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

    கடந்த பிப்ரவரி மாதம் 15 அன்று உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை எஸ்.பி.ஐ. இரண்டு பகுதிகளாக வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிறுவனங்கள் நன்கொடை அளித்த விவரங்களை மட்டும் அளித்த எஸ்.பி.ஐ. முழுமையான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

    இதனையடுத்து கடந்த 18-ம் தேதி அன்று தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டு அதுகுறித்து பிரமாணப்பத்திரம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அந்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. 

    • பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.

    சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?

    இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.

    ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.

    ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.

    இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய மந்திரி என சட்டத்தில் திருத்தம்.
    • மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம் தவறானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் கடந்த 2022-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்குப் பதிலாக பிரதமர், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கொண்ட குழு ஆணையர்களை தேர்வு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி இரண்டு தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோரை பிரதமர் மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்), அமித் ஷா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்தது.

    மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் தவறானது. ஆகையால் புதிய ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில் இந்த மனு இன்று சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் "தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க முடியாது. அப்படி தடைவிதித்தால் இந்த நிலையில் அது குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

    புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து மீது குற்றுச்சாட்டு ஏதும் இல்லை. நிர்வாகிகளின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம் என்று உங்களால் கூற முடியாது." என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் இடம் பிடித்திருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி "பரிசீலனைக்காக ஆலோசனை கூட்டத்திற்கு முந்தைய நாள் இரவு 212 பெயர்கள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக 6 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்கவில்லை.
    • ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆச்சார்யா பால்கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் "சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கும். பொருட்கள் மூலமாக மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்துவது மட்டுமே நிறுவனத்தின் நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் ஏப்ரல் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    • உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது.
    • நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் என்.டி.டிவி.-க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றம் எப்போதும் நாட்டின் மக்களுக்காக இருக்கிறது. உச்சநீதிமன்றம் செல்வம், சமூக அந்தஸ்து, ஜாதி, மதம், பாலினம், அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்காது. உச்சநீதிமன்றத்தில் சிறிய வழக்கு என்று ஏதும் கிடையாது.

    உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைகளையும் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்வதை உறுதி செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    நாங்கள் எப்போதும் சாமானிய மக்களுக்காக இருக்கிறோம் என்ற தகவலை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    சில நேரங்களில் எனக்கு நள்ளிரவில் கூட இ-மெயில் வந்துள்ளது. ஒரு முறை பெண் ஒருவர் மருத்துவ கருக்கலைப்பு தேவை எனக் கூறியிருந்தார். என்னுடைய ஸ்டாஃப்கள் என்னை தொடர்பு கொண்டனர். நாங்கள் அடுத்த நாள் அதற்கான பெஞ்ச் அமைத்தோம்.

    சிலர் வீடு இடிக்கப்பட்டிருக்கலாம், சிலர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், சிலர் சரணடைய வேண்டிய நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கலாம்... இதுபோன்ற இதயத்தை நொறுக்கும் வழக்குகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றன.

    எந்த வழக்கும் சிறிய வழக்கு என்று கிடையாது. நாங்கள் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறோம். சாமானிய மக்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்கள் நோக்கம். யார் ஆட்சியில் இருந்தாலும், சாதாரண மக்களுக்கு கவலைகள் உள்ளன, சட்டத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

    சமானிய மனிதன் எந்தவொரு பிரச்சனையை சந்தித்தாலும், முதலில் மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள நீதிபதிகளை சந்திப்பது முக்கியமானது என்று நினைத்தேன். மாவட்ட அளவிலான நீதிமன்றங்களை வலுப்படுத்தும்போது, நீதித்துறையுடன் மக்கள் தொடர்பை வலுப்படுத்துகிறோம்.

    இவ்வாறு டி.ஓய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரிடம் ரூ. 20 லட்சம் லஞ்சம வாங்கியபோது கைது.
    • கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    பின்னர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் மனுதாக்கல் செய்தார். உயர்நீதிமன்றமும் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    இதனைத்தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அனுமதி பெறாமல் தமிழகத்தை விட்டு வெளியேறக்கூடாது, சாட்சியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த கூடாது, சாட்சியங்களை அழிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கி வருகிற வியாழக்கிழமை மாலைக்குள், மறைக்ககூடிய அனைத்து தகவல்களையும் அதிலும் குறிப்பாக தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர் பெயர், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

    மேலும் இதனை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 2019-ம் ஆண்டு முதல் ஜனவரி 2024 வரையில் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 333 பேர் ரூ.358.91 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பத்திர தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


    இதில் 15 பேர் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பதவிகளை வகிக்கின்றனர். அவர்கள் மட்டும் ரூ.158.65 கோடிக்கு பத்திரங்களை வாங்கி உள்ளனர்.

    இதில் ஆர்செலர் நிறுவனத்தின் லெட்சுமி நிவாஸ் மெட்டல் ரூ.35 கோடிக்கும், ரிலைன்ஸ் லைப் சைன்சஸ் நிறுவனத்தின் லட்சுமி தாஸ் வல்லவதாஸ் ரூ.25 கோடி, ராகுல் பாட்டியா (இண்டிகோ) ரூ.20 கோடி, இந்தர் தாகுர் தாஸ் ஜெய்சிங்கனி (பாலிகேப் குழும நிறுவனங்கள்) ரூ.14 கோடி, ராஜேஷ் மன்னர்லால் அகர்வால் (அஜந்தா பார்மா லிமிடெட்) ரூ.13 கோடி என தரவுகள் காட்டுகின்றன. இவர்கள் உள்பட 15 கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மட்டும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு மொத்த மதிப்பில் 44.2 சதவீதம் என கூறப்படுகிறது.

    • தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்டதால் அவமதிப்பு வழக்கு.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும். நாங்கள் தேதி அறிவிப்வோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    இதைதொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில், பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    முதலமைச்சரின் பரிந்துரைப்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுவை உடனடியாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இதுகுறித்து திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.

    ஆளுநர் தனியாக ஒரு அரசை நடத்த முயற்சி செய்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×