search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்"

    • பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    • தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன?

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

    பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முடிவு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கவில்லை.

    இந்நிலையில் பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, "பொன்முடி 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்ததால், பொன்முடி தகுதி நீக்கத்திற்கு உள்ளானார்" என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும், "பொன்முடியை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக விரும்புகிறோம்.

    சாக்குபோக்கு செல்வதற்காக அரசியலமைப்பு சட்ட அறம் குறித்து ஆளுநர் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திற்கும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு வர வேண்டுமா?

    இருப்பினும், பொன்முடிக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடிப்படை உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன? என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு பொன்முடி பதவியை ராஜினாமா செய்தாரா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும், குற்வாளி என தீர்மானித்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு, ஆளுநருக்கு இதில் என்ன வேலை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தீவிரமாக கருத்துக்களை தெரிவிக்க உள்ளோம் என்பதை ஆளுநரிடம் தெரிவியுங்கள்.

    ஆளுநர் பதவி அடையாளத்திற்கு மட்டுமே.

    ஆளுநரின் செயல்பாடுகள் மிகவும் கவலை தரக்கூடியவையாக இருக்கின்றன.

    ஆளுநருக்கு இன்று இரவு வரை காலக்கெடு விதிக்கிறோம். நாளை உத்தரவிடுகிறோம். நாளைக்குள் சாதகமான தகவலை தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே ஆளுநருக்கு உத்தரவிடும்.

    இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக" தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

     

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
    • எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் அவர், மூவரும் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசு திட்டத்தில் விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து கேட்டறியலாம்.

    அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?" என்றார். 

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

    அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.

    மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். 

    நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

    அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?

    கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.

    அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?

    அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி. 

    'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர்.

    சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.

    தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை.

    குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை.

    நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர். 

    ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.

    "ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.

    அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை ராஜ் பவனில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராஜ் பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ரெயில்வே, பிஎஸ்என்எல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

    ஆனால், தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆளுநர் இன்று சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

    ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படை, என்டிஆர்எஃப், ரயில்வே, பிஎஸ்என்எல், ஐஎம்டி, ஏஏஐ மற்றும் ரெட் கிராஸ் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கோரிக்கை விடுத்தும் மாநில அரசில் இருந்து யாரும் வரவில்லை.

    குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள் வளங்களை மாநில அரசின் வசம் வைத்து, மாநிலம் கோரும் போது செய்து வருகின்றன.

    அவர்கள் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள்.

    சில முகவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை மதிப்பிடாதது குறித்து கவலையை எழுப்பினர்.

    மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுமாறு ஆளுநர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

    • நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
    • ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    • சம்மனில் விசரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

    செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    இருவரும் விசரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதானியை வளர்த்துவிட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்?
    • ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்றவரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

    பா.ஜ.க. கடந்த ஒன்பது ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளை தான் விளக்கி பேச வேண்டும். அதானியை வளர்த்துவிட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்? எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள். எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை.

    கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார். இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை. தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள், அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்.

    செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில், அதனை தற்போதிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். மாநிலங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்று ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

    இஸ்லாமிய சிறை கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்யமாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்யமாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
    • சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான  அறிக்கை கேட்டுள்ளார்.

    • சென்னை அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
    • திராவிட மாடல், தமிழ்நாடு உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் புறக்கணித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து இன்று நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    நாளை (11-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கோவிசெழியன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் நேற்று கவர்னர் உரை நிகழ்த்தியபோது சில வாசகங்களை தவிர்த்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கவர்னர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

    சட்டசபையில் கவர்னரை தாக்கி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசக்கூடாது. பேனர், சுவர் விளம்பரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்கூட்டம் சில நிமிடங்களில் முடிந்தன.

    • சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.
    • ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேட்டி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நாகர்கோவில் வந்தார். ஒழுகினசேரி 4 வழிச்சாலையில் வைகோவிற்கு குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தேவராஜ், பொருளாளர் பிச்சைமணி, மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி செல்வின், ஆபத்து உதவியாளர் அணி மாநில இணை செயலாளர் சுமேஷ், ஒன்றிய செயலாளர் நீலகண்டன், மாணவரணி அமைப்பாளர் சோனிராஜு, தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வின், மர்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.

    அப்படி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றுகிற விதத்தில் தமிழகம் என்று அழைக்கலாம் என்று எங்கோ இருந்து வந்து அகந்தையின் உச்சக்கட்டத்தில் இந்த மாநிலத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார்.

    தமிழ்நாடு என்ற பெயரை மாற்றலாம் என்ற யோசனையைச் சொல்வதற்கு இவர் யார்? தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமிர்வாதம் பேசுகின்ற இந்த கவர்னர் அகற்றப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும். சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தவறாகக் சொல்லிவிட்டேன் என்று அவர் செல்ல வேண்டும். நான் கவர்னருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவர்னரை பின்னால் இருந்து இயக்குவது சங்பரிவார் சக்திகள், இந்துத்வா சக்திகள் மதவாத சக்திகளுக்கு அந்த அளவு தைரியம் இல்லை. இவரை ஊதுகுழலாக வைத்துக் கொண்டு இந்த கருத்தைக் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×